எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
உன் சிரித்த முகம்
கண்டேன் என் கண்களில்
குளிர்ச்சி உன் புன்னகையும்
கண்டேன் என் மனதில்
மகிழ்ச்சி தேடமுடன்
உன் வரவை தேடி
காத்து நிற்கின்றேன்
நீயோ என்னை கண்டும்
காணாமல் இருப்பது
எனக்கு துன்பம் நீ என்னை
உற்று நோக்கினால்
என் மனதில் தடுமாற்றம்
தான் ஏனடி ஒரு வார்த்தை
தான் சொல்வாயா என்
வாழ்கையிலே வருவாயா
நீ என்னோடு பேசாமல்
இருக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் ஊமையாக வாழ்கின்ற
எண்ணம் என்னுள் ஏற்படுகிறது
எனக்கு உன்னிடம் பேசும்
தைரியத்தை வரமாக தந்துவிடு
நித்திரை
என்னை மறந்து விடு
என்ற வார்த்தை அவளிடம்
நான் கொஞ்சமும்
எதிபார்கவில்லை அதிர்ந்து
போனேன் மனம்
கலங்கியும் போனேன்
காலை பொழுது வெயிலின்
வெளிச்சம் என் கண்ணை
கூசியது நித்திரை கொண்டு
எழுந்த எனக்கு கிடைத்த
பரிசு நான் கண்டது
கனவு என்று
காதல் பரிசு
அவள் சொன்ன அன்பு வார்த்தை
என் நெஞ்சில் விதைக்கப்பட்ட விதை
காலம் சென்றது கிடைத்ததோ எனக்கு
கனி என்னும் காதல் பரிசு