எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
வணக்கம் தோழமைகளே...
எனக்கு தெரிந்து இதுவரையிலும் கவிதைகளுக்கான போட்டிகளே நடந்தேறி வருகின்ற பட்சத்தில்...
இது சிறுகதைகளுக்கான திறனாய்வு போட்டி, அதிலும் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவை மதிப்பிற்குரிய தோழர் திரு.பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதைகளென தன்னுள்ளே மிக பெரிய சிறப்பம்சங்களை பொதிந்து வைத்துக் கொண்டும்கூட எவ்வித மினுக்கலும் இல்லாமல் நிமிரும்.....
"பொள்ளாச்சி அபி-திறனாய்வு போட்டி" நாம் அனைவரும் சிரம் தாழ்த்தி வரவேற்று பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
சிறுகதை திறனாய்வு என்பது அவருக்கு வரும்.. இவருக்கு வரும்.. உனக்கு வரும்.. எனக்கு வராது.. தெரியாது... அனுபவமில்லை என்றெண்ணி ஒதுங்க (...)
கோலம் போட்டு
முடித்த பிறகு...
சிறுது நேரம்
அதையே உற்று பார்த்தவள்..
கோலத்தை கலைத்துவிட்டு
அழுதாளாம்..
--குழந்தை இல்லை...
தாய்பாலை மறப்பதற்காக
அன்னையை பிரிந்த
நாள் முதலாய் உன்
போர்வைக்குள்தான்
என் தூக்கம்...
மதிய பொழுதுகளில்
ஏத்தம் தடக்கம்
விளையாடியது..
நீ வாய்பாடு கேட்டு
நான் பாதியிலேயே
விழித்தது..
திருவிழாவிற்கு சென்று
சேரும் முன்பே..
பாதி வழியிலேயே
உன் தோளில் தூங்கியது..
பாட்டுக் கச்சேரியை
பார்க்க சொல்லி
தூங்கிய என்னை
நீ எழுப்பியது...
கொலுசை தொலைத்ததால்
எல்லோருமே திட்டி தீர்க்க
வாங்கிக்கலாம் என்று
என் அழுகையை
நீ அடக்கியதென..
நான் எதையுமே
மறக்கவில்லை...
உன் போர்வையைவிட்டு
வெளியேறிய நாள் மட்டும்
நினைவிலில்லையே என்று
உன்னை அணைத்துக் கொள்ள
தோன்றுகிறது அப்பா...
பள்ளி சீருடையில்
எடுத்த உறுதிமொழி
பொய்க்கிறது கேளுங்கள்...
பழகிபோன மனிதமற்ற
செயலாய்...
எவ்வித நெருடலுமின்றி...
மீண்டும் உலாவருகிறது..
இன்னொரு உடன்பிறவா
சகோதரியின் அந்தரங்க
உரையாடல்...
அட கடவுளே...!!
நான் "தமிழ் பித்தன்" ஆனது உண்மை தானா...??
இல்லை இது என் மன பிராந்தியா....!!
ராமா நீ வேற இங்க இல்லையே...!!
நான் என்ன செய்வேன்...??
ஏது செய்வேன்...??
நீங்கள் விரும்பும்
விருப்பமான சேனலை
வைப்பதற்கு
என்னிடம் ரிமோட்
இருப்பதின் அவசியம்
என்ன..??
மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி
போட்டி விவரங்கள்
இனிய தோழமைகளே ....
"மண் பயனுற வேண்டும்" குடும்பத்தின் மாலை வணக்கம் .அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் .
ஏற்கனவே எங்கள் கட்டுரை , எண்ணம் பதிவின் படி மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே கவிதை போட்டியை அறிவிக்கிறோம் .
இந்த போட்டிக்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும் . உங்கள் பேராதரவு என்பது நிச்சயம் போட்டியில் நீங்கள் பங்கு பெறுதலே .நீங்கள் எழுதும் எழுத்துக்கள் இந்த மண்ணை பயன் பெற செய்ய வேண்டும் . நிச்சயம் செய்யும் . ஆகையால் அனைவரும் வாருங்கள் . எழுதுங்கள் .உங்கள் எழுத்து தளம் மற்றும் வெளி நட்பு வட்டத்துக்கும் தெரிவியுங்கள் .காரணம் மண் பயனுற (...)
நீ தான் எமார்ந்திருக்க கூடாது என்ற
வார்த்தைகளுக்கு முன்பாகவே துளிரிலேயே கிள்ளி எறிந்தேன்
எனது சிறு காதலையும்
தோளின் ஈர்ப்பால் வரும் சிலரின் ஆசை போதைகளை
துரத்திவிட்டேன் இருந்தும்கூட ஆசிட் வீச்சுக்கு பயந்து தான் செல்கிறேன்
அவர்கள் இருக்கும் வீதிகளில்
தந்தையின் பேச்சை தட்டாது கேட்டு வந்தேன்
விரைவிலேயே மணம் முடிப்பார் என்ற அக்காவின்
அனுபவ வாழ்க்கையை வேடிக்கை பார்த்தவர்களுல் ஒருத்தியாய்
பெண்ணுரிமையை பிச்சையாய் போடும் சில வள்ளல்களுக்கு
எனது நன்றிகளற்ற அமைதி மட்டுமே தலைவணங்கி நின்றது
பெண் சுதந்திரம் பேசும் பெண்ணாதிக்கவாதி என்ற
முத்திரையை விரும்பாதவளாய்
பார்வையாலேயே என் (...)
தகவலை பகிருங்கள் தோழமைகளே
++++++++++++++++++++++++++++++++++
உங்கள் வீட்டில் நடக்கும் விஷேசங்களில்
உணவு மீதமாகிவிட்டால்
1098 -க்கு அழையுங்கள்...
அவர்கள் பசியால் வாடும்
குழந்தைகளுக்கு பகிர்ந்தளிப்பார்கள்.
தகவலை பகிருங்கள் தோழமைகளே அனைவரும் அறியட்டும்....
வீணாவது இந்த தகவல் மட்டுமல்ல
அதிகப்படியான உணவும்தான் மறவாதீர்..!!
இப்படிக்கு
ரெண்டும்- கெட்டவர்கள் சங்கம்
சிதறினால் தானே சேர்க்க முடியும்..
தொலைத்தால் தானே தேட முடியும்..
விதைத்தால் தானே அறுவடை செய்ய முடியும்..
விழுந்தால் தானே எழுந்து நிற்க முடியும்..
கொடுத்தால் தானே கேட்க முடியும்...
அழுதால் தானே சிரிக்க முடியும்...
இழந்தால் தானே பெற முடியும்...