எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பெண் சுதந்திரம் என்றால் என்னவென்று பெண்களுக்கு புரியாத வரை பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கப்போவதில்லை.. ஆயிரம் குட்டி ரேவதிகளை கூட்டிவந்து வாய்க்கு வக்கினையா நாக்கப்புடுங்கிறமாறி ஆண்கள் செய்கின்ற தவறை வாய் கிழிய பேசுவதன் மூலம் நாங்கள் சுதந்திரப்பறவைகள், பெண்களின் முன்னேற்றத்துக்காக தங்களை சர்வபரித்தியாகம் செய்து கொண்டவர்கள் போன்ற என்னத்தை ஏற்படுத்தவே இப்படி பேசுகிறார்கள் என்று என்னத்தோண்றுகிறது.. ஆண்-பெண் போட்டியொன்றைத்தான் இவர்கள் பெண் சுதந்திரம் என்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.. //ஆண்கள் செய்கின்ற தவறை போட்டி போட்டுக்கொண்டு செய்வதற்கு பெயர் பெண் சுதந்திரமல்ல அது வேற.. -தனி ஒருவன்// ஒரு சில வக்கிரன்களைத்தான்டி எல்லா ஆண்களும் ஏதோ ஒரு வகையில் தாயுமானவன்தான்..
DON'T TELL ME HOW TO DRESS... பெண் சுதந்திரப் போராட்டங்களில் பரவலாய் பார்க்கூடிய பேனர் இதுதான்.. இந்த நிலையில் பெண்கள் இருப்பது சரியா? தவறா? என்கின்ற விவாத்துக்கு நான் வரவில்லை, எல்லோருக்கும் மதம்,கலாச்சாரம், பன்பாடு, பக்குவம், சட்டம் இருகின்றது என்கின்ற போது, எதற்கெடுத்தாலும் முதலில் "பெண் என்பவள் இப்படித்தான் நடக்கவேண்டும், இப்படித்தான் உடுக்கவேண்டும்" என்று பெண்களை மட்டும் குறிகாட்டி தாக்குவதோடு, கிடைக்கும் கெப்பில் எல்லாம் பெண்களை பக்குவப்படுத்த முனைந்து தனது ஆன்மீக பய பக்தியை காட்டிக்கொள்ள முனைவது என்பதோடு ஆண்கள் நின்றுகொள்வது ஆண்களின் குருகிய ஆணாதிக்க மனநிலையைத்தான் காட்டுகிறது. ஏனென்றால் "பெண் என்று தெறிந்ததும் ஆற்றில் வீசி விடுவோம், தவறி உயிர் பிழைத்துவிட்டால் கல்வியை தரமாட்டோம், பின் இள வயதில் திருமணம்செய்துவைத்து ஏழு எட்டு உருப்படிகளுக்கு தாயாக்கி விடுவோம், தப்பி தவறி படித்துவிட்டால் திருமணத்தின் போது நாம் போடும் முதல் நிபந்தனயே வேலையை விடவேண்டும் என்பதுதான்.." இப்படித்தான் வாழ்திருக்கிறோம்.. வாழ்கிறோம்..
ஓரு நாள் ராத்திரி நல்ல நிலா. அவள் மூங்கில் போட்டு கட்டிய பழைய பக்கட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது மூங்கில் உடைந்து பக்கட்டின் அடிப்பாகம் சட்டென்று விழுந்துவிட்டது. இதை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறாள்...
"இப்படியும் அப்படியும் நான் பழைய பாத்திரதைக் காப்பாற்ற முயற்சித்தேன் திடீரென்று அடிப்பாகம் விழுந்தது.
இனி...
பாத்திரத்தில் தண்ணீரும் இல்லை தண்ணீரில் இனி நிலவும் இல்லை"
உ.து: சுஜாதாவின் "ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து"
படித்ததில் பிடித்தது...
இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..
ஒன்றில் எப்பவுமேரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக நாம் என்ன செய் (...)
பகுத்தறிவாளன்...
தமிழ் எழுத்து வடிவங்களில் என்னை வெகுவாக கவர்ந்தவர் சுஜாதா. அதபோல் நவீன விஞ்ஞான அறிவியல் சிந்னைகளின் தேடலில் என்னால்பெரிதும் கவரப்பட்டவர் இயற்பியலாளர் “ஸ்டீபன் ஹோக்கிங்” இவருடைய படைப்புகளை விளங்கிங்கிக்கொள்வதே நான் விரும்பும் ஒருவகையான சவாலான பொழுதுபோக்கு. இவருடைய படைபுகளான “ The Brief History of Time”, “Black Holes and Baby Universes”, “The Theory of Everything” போன்ற புத்தகங்கள் தொடர்ச்சியாக நவீன விஞ்ஞானத்தின் தேடலில் ஆர்வமிகுதியைத்தூன்டிக்கொண்டுதான் இருக்கிறது.
பொறுமை இருந்தால்மட்டும் தொடர்ந்து வாசிக்கவும்....
இதபோல் பிரபஞ்ஞத்தின் தோற்றம் பெருவெடிப்பையும் தான்டி பிளாங் (...)