எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அம்மா கையால் அதிகாலை பழஞ்சோறு அமிர்தம் உண்ண நீ நினைத்தால் அதுவே முதல் சாப்பாடு...!
ஏனென்று கேட்கும் மனதிற்கும், ஏங்கித்தவிக்கும் கண்ணுக்கும், பாரென்று மூளை கட்டளை இட்டும், முடியவில்லை முயற்சிசெய்ய..!!!
ஏதடா கடவுள் என்று ஏங்குகின்ற மனமே... நிறுத்து.! ஒருமுறை உன்மனதை உண்மையாய் நோக்கு... அதில் படிந்துள்ள போலிகளை உடனே தூக்கு... அடுத்தநிமிடமே ஆண்டவன் உன்னுள்ளே...!!!
வாடும் மலரில் வாசம் குறையும்...!
தேயும் நிலவில் ஒளி குறையும்...!
ஆனால், வாடியும் தேய்ந்தும்போன என் காதலில் வலி மட்டும் அதிகரிப்பது ஏனோ?
நள்ளிரவில் தனியாக வான்வீதியில் நிலாப்பெண் மேக சேலையினை போர்த்தியும் விலக்கியும்... எத்தனை ஜன்னல்கள் எத்தனை மொட்டைமாடிகள் ஏங்கித்தவித்தபடி எனது பேனாவையும் சேர்த்து...!
சிலநேரம் சில பொழுதுகளில் தனிமை பல இனிமையான நினைவுகளை தந்து செல்வதுண்டு.. ஆனால் அதில் எதற்கு முதலிடம் என்பதை மனதுதான் தீர்மானிக்கிறது..!
அம்மா கை அன்போடு அதிகாலை பழஞ்ச்சோறு அமிர்தம் உண்ண நீ நினைத்தால் அதுவே முதல் சாப்பாடு....!