எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தாத்தாவும் நானும்
மனித ஆயுள்
காற்று வெளியேறி
சுருங்கிப்போனது.
உத்தரவு கேட்காமல்
உள் நுழையும் காற்று
சொல்லிக்கொள்ளாமல் போவதில்
வியப்பொன்றும் இல்லை
தாத்தாக்கள்
மார்கண்டேயர்களா என்ன?
தாதாக்களால்
தன் மகன்களின் முனேற்றம்
அறியப்படுவதே இல்லை
அவைகள்
முயற்சி மொடுக்களாகவே
இருந்துவிடுகிறது
மனிதனின்
ஒவ்வொரு எதிர்பார்ப்பும்
இரண்டாம் தலைமுறையில்தான்
பூத்து குலுங்குகிறது
அப்பாக்கள் எல்லாம்
தாதாக்களாகும்போதுதான்
வாழ்க்கை புரிதலுருகிறது
பேரன்களுக்குதான்
பேரறிவு கிடைக்கிறது .
தாத்தாவும் பாட்டியும்
கதைப்பவர்கள் இல்லை
அறிவை விதைப்பவர்கள்
தாதாக்க (...)
உன் ஓர விழி பார்வையே கவிதைதான்
ஹைக்கூ
தமிழில் பேசினால் தண்டனை/
தமிழ் பேச்சுப் போட்டியில்/
பேசச் சொல்கிறார்கள்///
பறவையில்லா வானம்
கீழே
துப்பாக்கி சூடு
தண்ணீர் லாரி வந்தது
மோதிக்கொண்டன
காலிக் குடங்கள்
நாய்க்கு செல்லப் பெயர்
மகனை அழைத்தார்
நாயே
இந்திய மரம்
காய்த்துத் தொங்குகிறது
தொட்டில்கள்
மலையானபோது தெரியாத மானம்
சிலையானபோது
தெரிந்தது
வெற்றியில் நண்பன்
என் தோல்வியும்
இனித்தது
மருந்தாய் தங்க பஸ்பம்
போதும் போதும் என்றது
மனம்
ராஜ்கவி. சி. அருள் ஜோசப் ராஜ்