எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இதயம் இடம் மாறிப்போனது...
இமைகள் இமைக்க மறந்து போனது....
கால்கள் தடம் மாறிப்போனது....
கண்ணில் சுரம் ஏறிப்போனது....
கனவிலும் நினைவிலும்...
என்னவளே .. .உன் சுவாசம் வந்து சேர்ந்ததால் ...இதுதான் காதலோ . ...!
நிலவில்லா வானமாய்...மணமில்லா மல்லியாய்...ஸ்வரமில்லா ராகமாய்...நீயின்றி நான்....! என்னவளே....வசந்தமாய் வந்து....,வாழ்வில்... (renu)
29-Feb-2020 8:05 pm
நிலவில்லா வானமாய்...
மணமில்லா மல்லியாய்...
ஸ்வரமில்லா ராகமாய்...
நீயின்றி நான்....!
என்னவளே....
வசந்தமாய் வந்து....,
வாழ்வில் வெளிச்சம் தருவாயா....!
அவளில்லா அந்திப்பொழுது...நஞ்சுண்ட நெஞ்சமது.....வெஞ்சுரத்தால் வெந்தது போல்...!அழுந்து பட்ட விழுப்புண்... (renu)
27-Feb-2020 6:18 pm
அவளில்லா அந்திப்பொழுது...
நஞ்சுண்ட நெஞ்சமது.....
வெஞ்சுரத்தால் வெந்தது போல்...!
அழுந்து பட்ட விழுப்புண் மேல்..,
எறிந்து விட்டு வேல் பாய்வது போல்...!
நீ உதிர்த்த ஒற்றைச்சொல்...,
நெஞ்சை புண்ணாக்கியது பெண்ணே...!
பித்திகை சூடிய பெண்மையே. ..!
கொடிதினும் கொடிது...,
இளமையில் வறுமையாம்....!
ஆனால்...,
அதனினும் கொடிது...,
நீயில்லாத்தனிமையடி....!
மல்லிகை மலர் சூடி...,
அல்லிதழ் நடையோடு...,
நடந்து வரும் பூமகளின்..,
சொல்லில் தேன் தொடுத்த-
மெல்லிதழ் ஓசைகூட...,
வில்லில் வரும் அம்பாய்....,
என் விழி தைத்துப்போனதடி.!ம ஞ்சள் நிற ஆதவன் ஒளி..!
நெஞ்சில் பட்டு அழுத்துதடி....!
நீயில்லாத நேரந்தனில்....!
மழையே...கரையெல்லாம் உடச்சுப்போகும்காட்டாதது வெள்ளமே....!செவலக்காடு காத்திருக்கு..., சீமையெல்லாம் காஞ்சிருக்கு...!தரிசு நிலம்... (renu)
27-Feb-2020 4:24 pm
மழையே...
கரையெல்லாம் உடச்சுப்போகும்
காட்டாதது வெள்ளமே....!
செவலக்காடு காத்திருக்கு...,
சீமையெல்லாம் காஞ்சிருக்கு...!
தரிசு நிலம் தவங்கெடக்கு...,
தன்பணைதான் தவிச்சிருக்கு..!
பாழ் நிலமெல்லாம்..., பரசிப்போகும் பெருமழையே..!
பாவிமக்க நாங்களுந்தான்...,
பரிதவிச்சு காத்திருக்கோம்...!
புழுதிநிலம் பூத்துக்குழுங்க...,
பூமியெல்லாம் பூரிச்சுப்போக...,
இங்க கொஞ்சம் பெய்யட்டுமே....!
ஈரக்கொல நனையட்டுமே....!
ஆட்டுக்குப் புல்லருக்க. ..,
அடைமழை தான் பெய்யட்டுமே..!
மாட்டுக்கு தீவனமாக...,
மாரிதான் பெய்யட்டுமே...!
மானத்த காக்கத்தான்....,
மானாவரியாவது விளையத்தான்...,
மக்க கஷ்டம் போக்கத்தான்...,
மாரி நல்லா பொழியட்டுமே...,
மக்கள் பசி தீரட்டுமே.....!
காதல்....வானத்தூரலில்...வந்து போகும். ...வண்ண வானவில்,கலையாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்க்கைக்கு...... (renu)
27-Feb-2020 1:29 pm
காதல்....
வானத்தூரலில்...
வந்து போகும். ...
வண்ண வானவில்,
கலையாமல்
வாழ்நாள் முழுவதும்
வாழ்க்கைக்கு... வசந்தம்
அள்ளித்தருவதுவே காதல்...!
இந்த வண்ணங்கள்...
மெளனத்திற்கும் உரையெழுதும்....
உயிர்ப்புடையது....!
காதல்...
நீர்த்துப்போன வாழ்விற்கு...
நிம்மதி தரும்....
காதலித்துப்பார்...
கையெழுத்து மட்டுமல்ல..,
வாழ்வும் அழகாகும்....!