எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இங்கே பகிர்விற்கும் கருத்திற்கும் அளிக்கப்படும் மதிப்புகள் எந்த மனிதருக்கும் அளிக்கப் படுவதில்லை. என்றைக்கும் பதிவிடுவோர் கருத்துக்களை பதிவோர் பல நாள் தொடர்ச்சியாக காணவில்லையெனில் அவர்களைப் பற்றி விசாரிப்போம் என்ற எண்ணம் கூட இல்லாதவர்கள் எப்படி மனிதனாக இருக்க முடியும் அதிலும் கவிஞர்களாக இருக்க முடியும். மற்றவர்களின் வலியியைப் பிழிந்து கவிதை சாறு எடுத்து தங்கள் படைப்புக்களுக்கு கரு கொடுக்கும் அற்பர்களை என்னவென்று சொல்வது? ஒரு நல்ல கவிஞன் என்பவர் எழுதித் தான் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை மற்றவர்களின் உணர்வுகளை மதித்து மனித மாண்புடன் வாழ்ந்தாலே போதும்.
என் உயிரினும் மேலாய் மதிக்கும் அன்பு அம்மா Shyamala Rajasekar அவர்களின் மூத்த மகன் திரு.ராஜ்குமார் அவர்கள் கடந்த பதிமூன்று தினங்களுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவருக்கு முப்பத்து ஆறு வயது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உண்டு அம்மாவால் இச்செய்தியை நண்பர்கள் எவருக்கும் அறிவிக்க முடியவில்லை இன்று எனக்கு எஸ் எம் எஸ் மூலம் தெரிவித்தார். அன்னாரின் ஆன்மா ஷாந்தியடையவும் அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தார் ஆறுதல் அடையவும் இறைவனிடம் வேண்டுங்கள்.
வஞ்சப் புகழ்ச்சி அணிக்கும்
நண்பர்களுக்கு வணக்கம் சிறிது காலம் எனது கணினி பழுதின் காரணமாக எழுதாமல் இருந்த நான் மறுபடியும் எனது "மங்கையர்க்கரசி" என்ற சிறுகதை மூலம் எனது எழுத்துப் பயணத்தை துவக்கியுள்ளேன். என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கே போய்விட்டீர்கள் என் அன்பு நட்புக்களே...........???
நட்டாற்றில் நிற்பது போல் தோன்றுகிறது!!!!!!
வாழ்க்கையைக் கற்கிறேன் என் மகளிடமிருந்து........
என் மகள் சிறுகுழந்தையாய் இருக்கும் பொழுது எதற்காவது அடம் பிடித்து அழுதால் , என் மகளிடம் “நீ இப்படி அழுதுகொண்டிருந்தால் உன்னை மறுபடியும் எடுத்த இடத்திலேயே கொண்டு போய் விடுவோம்” என்று அவள் அப்பா கூறுவார். அவள் “என்னை எங்கிருந்து எடுத்தீர்கள்?” என்று கேட்பாள். அதற்கு அவர் “உன்னை நாங்கள் அம்பத்தூர் குப்பைத்தொட்டியிலிருந்து எடுத்தோம், நீ எங்கள் மகள் இல்லை உன் அம்மா, அப்பா வேறு யாரோ!” என்று கூறுவார். இது சாதாரணமாக சில குடும்பத்தில் நடக்கும் உரையாடல் தான் ஆனால் அதன் பின்பு நடக்கும் சம்பவம் தான் கொடுமை....
இன்று தற்செயலாக நானும் என் மகளும் உரையா (...)
பெண்கள் தினத்தை முன்னிட்டு #தமிழ்குஷி இணைய வானொலியில் எனது உரை இன்று இரவு பத்து மணிக்கு மறு ஒலிபரப்பு கேளுங்கள் நட்புக்களே.....
கீழ் காணும் இணைப்புகளில் கேட்கலாம்............
இன்று சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி,
நான் நமது அன்பான நண்பர்களுடன்
பங்குபெறும் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
தமிழ்க்குஷி இணைய வானொலியில்..
கேட்டு மகிழுங்கள்..., நன்றி !!!!!!
Sumathi Srri Naan Raajamagal Madhuram Prabhakar Uma Bharathi Vidhya Gurumoorthy Latha Arunachalam Sahana Dhas Thenammai Lakshmanan தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் விழுதுகள் Anitha N Jayaram Mohana Opesh TamilKushi FM Sumitha Ramesh
ONLY on TamilKushi (...)
பெண்ணியம் என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் தான். இன்னும் அடிமைத்தனம் இருக்கிறதா என்ற கேள்விக்கு என்னிடம் பதில்.............? ஆனால் அடிமைத்தனம் என்பதையும் அன்புடன் ஏற்றுக்கொண்டாலே குடும்பம் என்பது கோவிலாகும் ஒவ்வொரு பெண்ணுக்கும். நாம் நாமாக வாழ்ந்தாலே பல பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளிதான்..........பெண்கள் அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்......
சுடச் சுட சேமியா உப்புமாவுடன் ஒரு காலை வணக்கம்.............
என் மகளுக்கு இன்று தமிழ் முதல் தாள் தேர்வு, நானே “தொடக்கக் கல்வித் துறை”யை “தோட்டக் கல்வித்துறை”ன்னு படிக்கிறேன். அவள் தேர்வு எழுத என் மனசு படபடக்கிறது...... கடவுளே நீதான் காப்பாத்தணும் என் நாவிலிருந்து தமிழையும் கூடவே என் மகளையும் தான்.............