எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
எப்போது நாம் மிகக் கேவலமாக தாழ்ந்து போகிறோம் தெரியுமா ?
அரசியல்வாதிகள் மட்டும் மக்களுக்குத் தீங்கு, துரோகம், செய்யவில்லை, மக்களே மக்களுக்குள் தீங்கும் துரோகமும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இது அரசியல்வாதிகளின் இயல்பு மட்டுமல்ல மனித உருவில் திறியும் மிருகங்களின் இயல்பாகும்.
உதாரணமாக ஒரு உணவகத்திற்கு செல்கிறீர்கள் , ஒரு ஆம்லெட் ஆர்டர் செய்கிறீர்கள் , சமையல் மாஸ்டர் என்ன செய்கிறான் ? எப்போதோ போட்டு வைத்த ஆறிப்போன ஆம்லெட்டை சூடு செய்து சற்றும் மனசாட்சி இல்லாமல் கொடுக்கிறான்.
இன்னொரு உதாரணம், பேருந்து பயணத்தில் மனசாட்சி இன்றி மிருகம் போல நடக்கும் நடத்துனர், இவ்வாறாக மனிதன் தனது இனத்திற்கே தீங்கு செய்து வாழ்கிறான்,
பிறர்க்கின்னா முற (...)
எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்க முடியாது, என்ற உண்மை பதின் பருவம் தாண்டிய பிறகே தெரியும்.
யாரையும் மாற்ற முடியாது என்ற உண்மை வாலிபம் தாண்டிய பிறகே தெரியும்
எல்லாமே சரியாகத்தான் இருந்தது , தான்தான் சரியில்லை என்பது வயோதிகம் தாண்டிய பிறகே தெரியும்.
- அன்புடன் தமிழ்
யாருடைய அறிவுரைகளையும் எதிர்க்காமல் செவி தாழ்த்தி கேட்பது நல்லது, அதனை சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளாலம், தவறாகப் பட்டால் நிராகரிக்கலாம். இவ்வாறான விடயங்களில் வாக்குவாதம் செய்வது தேவை இல்லாத சர்ச்சைகளை ஏற்படுத்தும்.
- கற்றது
நல்லவன் படைப்பு நாறப் பயகை யில் சிக்குவதென்பது
இறைவனியற்றிய யகதை யினியல்பு
பொருள் : ஒரு திறமைசாலியின் படைப்பு ( எ. கா : ஓவியம் ) கெட்ட எண்ணம் கொண்டவர் அல்லது கையில் மாற்றிக்கொள்வது என்பது இறைவன் விதித்த விதி , அதாவது குரங்கு கையில் சிக்கிய பூமாலை.
- புதுக் குரல் 233455000000
பல மனிதர்களின் இயல்பு இதுவே !
படிக்கதவர்களைவிட படித்தவர்களில்தான் அதிக சுய நலவாதிகளையும் ,
அன்பு என்ற நிபந்தனைக்குள் அடங்காத ஒன்றை , நிபந்தனைக்குள் அடக்கி கொஞ்சம் செய்கிறவர்களையும் பார்க்க முடிகிறது. கல்வியின் நோக்கம் அறிவு மட்டும் அல்ல , அறிவு வேண்டுமாயின் நூலகங்களில் அள்ளிக் கொள்ளலாம் , கல்வியின் நோக்கம் ஒழுக்கமாகவே இருக்க வேண்டும். ஆனால் இங்கு நிரம்ப கல்வி கற்றவர்களிடம் , ஒழுக்கத்தின் ஒரு நூல் கூட பார்க்க முடிவதில்லை, தங்களை சுற்றி ஒரு பாது காப்பு வளையத்தை போட்டுக்கொண்டு வாழ்கிறார்கள். சக மனிதர்களிடம் அன்பாக இருப்பதற்கு அணுவளவும் அவர்கள் தயாராக இல்லை. ஒருவனைக் கொண்டு என்ன பலன் அடைய (...)
என்ன செய்யப் போகிறீர்கள் என்ற தெளிவுக்கும் , முடிவுக்கும் வாருங்கள். சரியான திட்டம் தீட்டுங்கள், உங்கள் முயற்சி தவறாக போனாலும் அதனை சரியாக செய்த முடிக்கும் வரை முயற்சி செய்து கொண்டே இருங்கள். உங்கள் சிந்தனையின் வேகத்தை அதிகரியுங்கள், சிந்தனையின் பாதையை மாற்றுங்கள்.
பெண் உரிமை என்ற பெயரில் சில பெண்கள் செய்கிற கலாச்சார சீர்கேட்டை , கைகட்டி பார்த்துக்கொண்டிருக்க சொல்கிறீர்களா ?
இவர்களை பொருத்தவரை எதுவுமே தவறு இல்லையாம் , எதுவுமே....
நேர்மைக்கும் உழைப்புக்கும் அயல் நாடுகளில் மதிப்பு மிகவும் குறைவு குறிப்பாக கார்பொரேட் நிறுவனங்களில், உதாரணமாக நான் பணிபுரிகிற தனியார் நிறுவனம் , உண்மையிலேயே இந்த நிறுவனத்தின் முதலாளி மிகவும் நல்லவர் , கொடைத்தன்மை நிறைந்தவர் என்றும் இங்கு நேர்மையாக பணிபுரியும் சில அதிகாரிகள் கூறுகின்றனர், ஆனால் இடையில் முக்கிய பதவிகளில் இருந்து கொண்டு மானக்கேடான வேலைகளை செய்து கொண்டிருக்கும் சில கழிசடைகளின் அட்டூழியம் தாங்க முடியவில்லை, எந்த பெண்களெல்லாம் அவ்வதிகாரிகளிடத்தில் வளைந்து நெளிந்து கொஞ்சிப் பேசுகிறார்களோ அவர்களுக்கு கூடுதல் சம்பளம் கூடுதல் என்பதை விட மிகவும் கூடுதல், பல வருடங்கள் கிட்டத்தட்ட பத்து (...)