எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தோழர் ராம்வசந்த் அவர்களின் "அக்கரைச் சீமை அழகி" கவிதை ... ஜன்னலில் வெளிவந்துள்ளது... வாழ்த்துக்கள் ராம்....
உனக்கு கோபம்
வரும்பொழுதல்லாம்
மிக நெருங்கி சொல்கிறேன்
உனக்கு கோபம்
வந்திருக்கிறது..
--கனா காண்பவன்
கிள்ளி பார்க்காதீர்கள்
வாழ்க்கை கலைந்துவிடும்...
கரிச்சா மண்ட
சட்டித் தலையன்
கொத்துன கல்லு
முள்ளு மண்ட
எதற்கும் கவலைப்படாமல்
ஒரு முறையாவது
வெட்டிவிட வேண்டும்
அம்மா சொல்வது போல
அரை சென்டிமீட்டருக்கு
சற்றே அதிகமாக முடியை...
--கனா காண்பவன்
அதிகம் தெரியாதவனாக நடிக்கவாவது முயற்சி செய்யுங்கள்... விவாதங்கள் ஆரோக்யமாக இருக்கட்டும்... பல முறை என் கனவில் வருவது ஒன்றே ஒன்று தான் ... "நான் யார் என்று காட்டும் முயற்சியிலேயே நான் யார் என்பதை மறந்துவிடுகிறேன்..."
இப்படிக்கு,
ஒரு கோமாளி
ஒரு லூசு
ஒரு பைத்தியம்
ஒரு கவிஞன்
ஒரு அரைகுறை
.... எதுவாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள்....
ஹாய் சொல்லி
நகர்ந்தேன்
சாக்லேட்டை காட்டி
கையை ஆட்டி
கவிதையை தந்துவிட்டு
சென்றது குழந்தை..
--கனா காண்பவன்
முதலிலிருந்து---2
ஆதாமின் தோளில்
ஏவாள் சாய்ந்திருந்தாள்.
மண்வாசம் நாசியை
தழுவும் வரை
குளிர் காற்று
தேகம் தீண்டும் வரை
ஒரு பூ உதிர்ந்து
மேல் விழும் வரை
உடையற்றும் ஒன்றும் தோனவில்லை..
இப்போது
ஒரு முத்தம் தர
ஆதாம் எத்தனிக்க
அவர்களின் குழந்தை
முன்னே தவழ்ந்து வந்தது.
முதல் முறை
சிரிக்கப் பழகினார்கள்
முதல் மனிதனும்
முதல் மனுசியும்.
--கனா காண்பவன்
முதலிலிருந்து--1
ஏவாள் தன் குழந்தைக்கு
பாலூட்டி முத்தமிட்டு
தூங்கவைத்து அழுகை நிறுத்த
செய்பவற்றை எல்லாம் பார்த்திருந்த
ஆதாம் நினைத்திருப்பான்
நான் மூன்றாவது மனிதனாகவே
இருந்திருக்கலாம்..
--கனா காண்பவன்