எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கட்டியவன் கட்டில்
வரை தான் வேலை
என்று கருக் கொள்ளச்
செய்து காணாது போக
வீணானது வாழ்க்கை
தன்னுயிரை விட்டுவிட 
எண்ணியவள் சிசுவாய்
அவள் சுவாசம் வங்கி 
வளரும் எனை நினைத்து
மூச்சை நிறுத்திக் கொள்ளாது
தனைத் திருத்தி கொண்டு
எனை புவிக்கு கொண்டு
வந்தாள் அது முதலே அவள் 
அழுகையை சிரிப்புக்கு
பின்னால் சிறை வைத்து
எனை வளர்க்க அறிவை
அமுதாய் தினம் ஊட்டி
வானும் உன் கையெட்டும்
தூரம் தான் தொட்டுவிடு
என்று ஆளுயரம் ஆண்
மகனாக்கினள் அன்று
சொல்லியதை எள்ளவும்
மாறாது நிறைவேற்றுவேன்
என்ற நம்பிக்கையில் இன்று
நானும் அவளும்.......

மேலும்

தனிமை தன்னை தானே
வலிமை ஆக்கும் வல்லமை
தந்துவிட துன்பத்தில் தின்னிய
உறுதிக் கொண்டு இருக்கவும்
சூழ் கொள்ளும் சூழ்ச்சியை
எதிர்க் கொள்ளவும் கற்றுத்
தர சுற்றத்தார் யாயும் உற்றத்
துணையும் அல்ல என அது
உரக்க சத்திமிட்டு கூற முயற்சி
ஒன்றை முழு மூச்சாய் முதுமை
வரைக் கொள் கடைசி வரை
வெற்றியாளன் நீ மட்டுமே
#விஷ்ணு

மேலும்

ஆண்களின் கவனம் ஈர்க்கும் மூன்றாம் பெண்களில் பலரும் அந்தக் கணமே அவனுள் கற்பழிக்கப்படுகிறார்கள்.

மேலும்

என் அன்புக்குரிய நட்புகளே நான் தெளிவு இல்லா மன நிலையில் உழன்றுத் திரிகிறேன்.
நான் எழுதுவது கவிதையா இல்லை வெறும் குருக்களா என்று சொல்லுங்கள் அதை அறியக் குழப்பத்தில் நான்...!

மேலும்


மேலே