படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

வார்த்தைச் சிறகுகள் முளைத்து வழி தேடி அலைகிற.. பாடல் படைத்துப் பறக்கக் கற்றுக் கொள்ள பாதை நாடி வருகிற ஒவ்வொருவருக்கும்.. பிரத்தியேகமாய்.. பிரகாசமாய்.. திறந்திருக்கிறது ஒரு புத்தம்புது வானம்.. தேடித்தேடியும் கிடைத்திராதொரு புது அறிவும்.. இதற்கு முன் இல்லா அரிய வாய்ப்பும்.. மனம் நிறையும் பெரும் அங்கீகாரமும்.. எழுத்துப்பசி கொண்ட.. படைப்புத்தீ கொண்ட.. உங்களுக்குக் காத்திருக்கிறது.. ஒரு பாடல் உங்கள் வாழ்வை மாற்றலாம்.. ஒரு பாடல் உங்களை உயரே ஏற்றலாம்.. ஒரு பாடல் உங்கள் புகழாய் மாறலாம்.. ஒரு பாடல் உங்களை வரலாறாக்கலாம்.. ஒட்டுமொத்த உலகின் அத்தனைக்கோடித் தமிழ்த்திரை ரசிகர்களும் ரசிக்கும் ஆயிரக்கணக்கானப் பாடல்களைப் படைப்பது.. திரைத்துறையின் இருபதுக்கும் குறைவான பாடலாசிரியர்களே. காரணம் அவர்களுக்கு மட்டுமே வசப்பட்ட படைப்புச் சூட்சுமம். ஒரு சிலருக்கே சாத்தியப்பட்ட அந்த வித்தை, ஆர்வமும் அடிப்படைத் தகுதியும் உள்ள அனைவருக்கும் கைக்கூடும் எனில்.. அதுவும் எவரால் பாடல் இயற்றப்படுகிறதோ அந்த முன்னணிப் பாடலாசிரியர்களே அதைக் கற்றுத்தர முன்வந்தால்.. பாடலாசிரியர் பிரியன் தலைமையில்.. முயற்சியில்.. ஒருங்கிணைப்பில் , உலக வரலாற்றில் முதல்முறையாக.. தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing). உள்ளுக்குள் உயிர்த்திருக்கும் சொந்த வார்த்தைகளைச் சந்த மெட்டுகளுக்குள் ஊற்றி, உலகறிய மேடையேற்ற விரும்பும் ஒவ்வொருவருக்குமான சரியான களம். இதுவரை எளிதில் அறிந்துகொள்ள இயலாதிருந்த பாடல் இயற்றும் அறிவு. ஒரு முழுமையான பாடல் இயற்றுநராய் மிளிரத் தக்க பல வாய்ப்பு. நேரடியாக பாடலாசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அனுபவம். திரைப்பாடல் இயற்றுநர் படிப்புக்கான அங்கீகாரம். இவை அனைத்தும் இதில் வசம். மொழியறிவு, கவியறிவு, பாட்டறிவு, இசையறிவு, படைப்பறிவு, ஆய்வறிவு எனப் பல்லறிவு வளர்த்து.. பாடல் படைப்பு, பாடல் பதிவு எனச் செயலறிவு செழித்து.. திரைத்துறை, சின்னத்திரை, ஆன்மீகப் பாடல்கள், விளம்பரக் குறும்பாடல்கள், ஆல்பங்கள் எனப் பாடல் நுழையும் அனைத்துத் துறையறிவும் அறிந்து.. இறுதியில் திறன்மிக்க முழுமையான பாடல் இயற்றுநராய் இச்சகத்தில் படைப்பெய்த இதுவே பாதை.. சென்ற வருடம் பெறப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்தைந்து மாணவர்களில், ஏழுக்கும் மேலானவர்களுக்கு.. திரைத்துறையில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்து.. தற்பொழுது திரைப்படங்களில் பாடல்கள் எழுதி உள்ளனர். மேலும், தமிழ்த் திரைத்துறையில் இருந்து இதுவரை ஆறுக்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் தங்கள் படங்களுக்குப் பாட்டெழுத தமிழ்த் திரைப்பாக்கூடம் வந்துள்ளன. முன்னணிப் பாடலாசிரியர்களிடம் இருந்து நேரடியாகப் பாடல் எழுதக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு பெற்ற இவ்வகுப்பிற்கு.. இதுவரை இசையமைப்பாளர் விஜய்ஆண்டனி, இசையமைப்பாளர் தமிழ்ப்படம் கண்ணன் போன்ற பல இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், பாடகர்கள், திரைத்துறை பிரபலங்கள் நேரில் வந்து பாட்டெழுதுதல் குறித்தத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, தமது அடுத்தடுத்தத் திரைப்படங்களில் பாடல்கள் எழுத மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். சிறந்த அடுத்தத் தலைமுறைப் பாடலாசிரியர்களை உருவாக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தோடு தொடங்கப்பட்ட தமிழ்த் திரைப்பாக்கூடத்தில் இணைய விருப்பம் கொண்ட.. அடிப்படைத் தமிழறிவும், அடிப்படைக் கவியறிவும் உள்ளவர்கள் சுயவிவரக்குறிப்போடு (Bio-data) தங்களது கவிதை அல்லது பாடல் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் - diplyric@gmail.com குறிப்புகள் : படிப்பு : திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு (Diploma in Lyric Writing) காலம் : ஒரு வருடப் பட்டயப் படிப்பு (One-Year Diploma) இடம் : சென்னை வகுப்புகள் : சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் குறைந்தபட்சக் கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு சிறப்புத் தகுதி : கவிதை அல்லது பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருத்தல் வயது வரம்பு : இல்லை தொடர்பிற்கு : 9566196747 , 8056161139 மின்னஞ்சல் : diplyric@gmail.com


Close (X)

வழி : செ.பா.சிவராசன் கருத்துகள் : 0 பார்வை : 133
1
1

திருமண ஆசை காட்டி 60-க்கும் அதிகமான பெண்களை மோசடி செய்து, அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை பறித்த ஆசாமியை பீகார் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம் சமஸ்டிப்பூர் மாவட்டத்தை செர்ந்தவன் முகம்மது சிஸாம்(30). ரெயில் டிக்கட் பரிசோதகராக பணியாற்றுவதாக கூறி வந்த இவன், வைஷாலி மாவட்டம், பஹவ்தின்பூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டான். அந்த சிறுமியை காணவில்லை என்று அவளது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பல்கான் காவல் நிலைய போலீசார், மாயமான சிறுமியின் செல்போனுக்கு வந்த பழைய அழைப்புகளின் அடிப்படையில் சமஸ்டிப்பூர் மாவட்டத்துக்கு சென்று முகம்மது சிஸாமை கைது செய்தனர். அவனிடம் இருந்த 4 செல்போன்களையும், 8 சிம் கார்டுகளையும் பறிமுதல் செய்த போலீசார், பல்கான் போலீஸ் நிலையத்துக்கு அவனை அழைத்து வந்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது, 4 செல்போன்களிலும் மாறி, மாறி ஏகப்பட்ட அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. எதிர் முனையில் பேசிய அனைத்து பெண்களும் தாங்கள் முகம்மது சிஸாமின் மனைவி என்று கூறியதால், தலை சுற்றிப் போன போலீசார், அவர்கள் ஒவ்வொருவருக்கும் மீண்டும் போன் செய்து போலீஸ் நிலையத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அடிப்படையில், சம்ப்ரான் மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வந்த முகம்மது சிஸாம் அங்கு மட்டும் 8 பெண்களை திருமணம் செய்து, அவர்கள் அனைவரையும் தவிக்க விட்டு 2004-ம் ஆண்டு தலைமறைவாகி விட்டான். பின்னர், ஒவ்வொரு மாவட்டமாக சுற்றி, ரெயில் டிக்கட் பரிசோதகராக பணியாற்றுவதாக கூறி 60-க்கும் மேற்பட்ட பெண்களை இவன் நாசப்படுத்தியுள்ளான். எந்த பெண்னை அடைய விரும்புகிறானோ..? அதற்கு தகுந்த மாதிரி தனது மதத்தையும் பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொள்ளும் அவனது இனிப்பான பேச்சில் இளம் பெண்கள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோரும் மயங்கி விடுவது உண்டு. இவர்களில் பல பெண்களை தாயாக்கி விட்டு, ஏதேதோ பொய் காரணங்களை கூறி அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விடுவான். பல நாளாக கணவனை காணவில்லையே.. என்று மனைவி மார்கள் போன் செய்தால், டிக்கட் பரிசோதிக்கும் பணியில் பிசியாக இருப்பதாகவும், விடுமுறை கிடைக்கவில்லை என்றும் சாக்குப் போக்கு சொல்லி ஏமாற்றி விட்டு, எப்போதாவது ஞாபகம் வந்தால் இரண்டு அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறை ‘ஒரு பேஷண்டை டாக்டர் சென்று பார்ப்பது போல்’ வந்து சந்தித்து விட்டு மீண்டும் தலைமறைவாகி விடுவான். நாங்கள் அழைத்ததன் பேரில், இது வரை இவனை தனது கணவன் என்று உரிமை கொண்டாடி 15 பெண்கள் குழந்தைகளுடன் வந்து சேர்ந்துள்ளனர். இன்னும் பல பெண்கள் கொல்கத்தா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், பீகாரின் இதர மாவட்டங்களில் இருந்தும் வந்துக் கொண்டிருக்கின்றனர் என போலீசார் தெரிவித்தனர். ’போகிற போக்கை பார்த்தால்.. இவன் திருமண விஷயத்தில் ‘செஞ்சுரி’யை தாண்டியிருப்பான் போல் இருக்கிறது’ என்று ஒரு போலீஸ் அதிகாரி வேடிக்கையாக குறிப்பிடுகிறார். "இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"


வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 120
2

நந்தலாலா - குமரி வீசிய வலையில் வீழ்ந்து விட்டாயே நந்தலாலா...! விலைபேச முடியா நட்பை விட்டாயோ நந்தலாலா...! அகம் காணாமல் பறந்து வந்தாய் நந்தலாலா..! முகம் காணும் நேரம் மறந்து சென்றாயோ நந்தலாலா..! தேளாய் கொட்டிய தேவன் நன்றா நந்தலாலா..! தோளை கொடுத்த தோழமை கொன்றா நந்தலாலா..! ஒட்டிய நட்பில் வெட்டியது ஏனோ நந்தலாலா..! வெட்டியதும் குரல் ஒட்டி முட்டியதேன் நந்தலாலா..! வேகம் கண்டுதான் மோகம் கொண்டேன் நந்தலாலா..! நகம் போலென்னை வெட்டி விட்டாயோ நந்தலாலா..! விரலுக்கா? நகதுக்கா? விடுதலை யாருக்கு நந்தலாலா..! பகைமைக்கா? நட்புக்கா? பதில் சொல்வாயோ நந்தலாலா..! விடையறிய தவிக்கின்றேனுன் விடுகதையால் நான் நந்தலாலா..! விடை கொடுத்து வழியனுப்பு என்னை நந்தலாலா..! ---நட்போடு குமரி. உண்மை நட்பு


வழி : நாகூர் கவி கருத்துகள் : 0 பார்வை : 127
1

கோடை வெயில் வெளியே செல்ல முடியாமல் தடை விதிக்கிறது. அனல் காற்று வீசுவதால் வீடுகளிலும் இருக்க முடியவில்லை. இரவு தூக்கமும் வர மறுக்கிறது. இத்தனை சோதனைகளையும் நாம் தாங்கித்தானே ஆக வேண்டும். இந்த கோடையை சமாளிக்க ஏராளமான பழங்கள் தற்போது மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ளன. சில பழங்களை அப்படியே உண்ணாமல் சாறு எடுத்து குடித்தால் பலன்கள் கூடுதலாக உள்ளது. பழச்சாறு குடித்தால் சிறுநீர் வெளியேறும்போது பல்வேறு நோய்களின் தாக்கம் வெளியேறி விடும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் வெயில் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குணமாகும். மேலும் இப்பழச்சாறுடன் சமஅளவு மோர் கலந்து குடித்தால் காமாலை கூட குணமாக வாய்ப்புள்ளது.


வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 132
4

ஆஸ்டியோபோரோசிஸ்' என்பது எலும்பு பாதிப்பு ஆகும். எலும்பின் அடர்த்தி, பருமன் ஆகியவற்றில் சுரப்பிகளின் மாறுதல்களால் ஏற்படும் கோளாறாகும். இதனால் எலும்பு முறிவு, எலும்பு மூட்டுக்களில் வலி ஆகியவை ஏற்படுகின்றன. கால்சியம் சீரமைப்புப் பணியை பெண்களிடத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும், ஆண்களிடத்தில் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோ னும் செய்கின்றன. இந்த சீரமைக்கும் ஹார்மோன்களின் சுரக்கும் தன்மை 60 வயது ஆன பெண்களுக்கும், 70 வயது ஆன ஆண்களுக்கும் குறையத் துவங்குகிறது. ஆகையால் வயதானவர்கள் இத்தகைய நோய்க்கு பெருமளவு ஆளாகிறார்கள். இதைச் சரிசெய்வ தற்காக பல ஹார்மோன்களின் மாத்திரைகள் கிடைக்கின்றன. இதைக் கொண்டு எலும்புகளில் ஏற்படும் இக்குறைபாட்டை இயற்கையாக நீக்கலாம். அதிலும் உணவு முறைகளை சரியாகக் கடைப்பிடிக்கும்போது, இத்தகைய குறைகளைக் குறைக்க முடியும். அதுவும் பின்வரும் ஊட்டச்சத்துகளை தினசரி உட்கொண்டால் ஆஸ்டியோபோரோசிஸை தடுக்க முடியும். கால்சியம்: இது உடலின் செயல்களை சீராக அமைக்க உதவுகிறது. நமக்குத் தேவையான அளவு கால்சியத்தை தினசரி எடுத்துக் கொள்ளாவிட்டால் நமது உடல் எங்கு அதிகம் கால்சியம் உள்ளதோ அந்த இடத்திலிருந்து கால்சியத்தை எடுத்துக் கொள்கிறது. இதனால் எலும்புகளின் சக்தி குறைந்து, அவை உடையும் தன்மைக்கு வந்து விடுகின்றன. இப்படி இருந்தால் நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு கால்சியத்தை உண்ணவேண்டும்? ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1000, 2000 மில்லி கிராம் வரையிலும் கால்சியம் தேவைப்படுகிறது. இதை நாம் தயிர், பால், சோயா, சோயா பால், டோபு, கெட்டித்தயிர், குறைந்த கொழுப்புள்ள ஐஸ்கிரீம், வெள்ளை பீன்ஸ், சைனீஸ் கோஸ், கேல், கொலார்டு கிரீன்ஸ், புராக்கோலி, பாதாம் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் இருந்து பெறலாம். வைட்டமின் 'டி': வைட்டமின் 'டி' இல்லாமல் கால்சியத்தை உண்பது உபயோகமில்லாமல் போய் விடும். கால்சியத்தை உடல் ஏற்றுக்கொள்வதற்கு வைட்டமின் 'டி' தேவைப்படுகிறது. மனித உடல், சூரிய வெளிச்சத்திலிருந்து வைட்டமின் 'டி'யை பெறமுடியும். ஆனால் உடம்பை அதிக அளவு சூரிய ஒளிக்கு வெளிப்படுத்துவது கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல், புற்றுநோயை தூண்டுவதாகவும் உள்ளது. ஆகையால் இதை நாம் உணவாக எடுத்துக் கொண்டு ஈடு செய்ய முடியும். சாலமன், மத்தி, கானாங் கெளுத்தி, கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் முட்டை மஞ்சள் கரு ஆகியவற்றில் வைட்டமின் 'டி' அதிகள வில் உள்ளது. தினசரி உடற்பயிற்சி, எடை தூக்குதல், சக்தியை அதிகரிக்கும் பயிற்சி ஆகியவற்றைக் கலந்து செய்வது உடம்பில் உள்ள எலும்புகளைவலு வடையச் செய்யும். ஓடுவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது, யோகா ஆகியவற்றின் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் எலும்புகளும் உறுதிப்படுகின்றன. மது அருந்துவதைக் குறைத்தல்: மது அருந்துவது உடம்பில் ஆல்கஹால் அளவை அதிகப்படுத்தி எலும்புகளை நாசம் செய்கின்றது. இது கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உடல் ஈர்த்துக் கொள்ளவிடாமல் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் பாராதைராய்டு சுரப்பியை அதிகரித்து கால்சியம் மற்றும் வைட்டமின் டியை உடைக்கின்றது. அது மட்டுமல்லாமல் கார்டிசோல் என்று கூறப்படும் கால்சியம் சேகரிக்க உதவும் சுரப்பியை குறைவாக சுரக்கச் செய்கின்றது. எலும்புகளை உருவாக்கும் அணுக்களான ஓட்டியோபிளாஸ்ட்களை உருவாக விடாமல் தடுக்கின்றது. புகை பிடிப்பதும் எலும்புகளின் அடர்த்தியைப் பாதிக்கிறது. எனவே மது வையும், புகைப்பதையும் தவிர்க்க வேண்டும்.


வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 113
2

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே