படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

பாராளுமன்ற தேர்தலுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும் என ஒரு ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது. செலவின ஆய்வு ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படுகிற இந்திய பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 7–ந் தேதி தொடங்கி மே மாதம் 12–ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் 9 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை. இந்த தேர்தல் செலவினம் குறித்து ஊடக கல்வி மையம் ஒரு ஆய்வு நடத்தியது. இது அரசுக்கு ஆகும் செலவு, அரசியல் கட்சிகளின் செலவு, வேட்பாளர்கள் செய்கிற செலவு என பல அம்சங்களையும் ஆராய்ந்தது. அரசுக்கு ஆகும் செலவு அந்த ஆய்வின் முடிவில், 16–வது பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கு மத்திய அரசின் கஜானாவுக்கு மட்டுமே சுமார் ரூ.7ஆயிரம் கோடி முதல் ரூ.8 ஆயிரம் கோடி வரை செலவாகும் என தெரிய வந்துளளது. இந்த தொகையில் ரூ.3 ஆயிரத்து 500 கோடியை தேர்தல் கமிஷன் செலவு செய்யும். மீதித் தொகையை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இந்திய ரெயில்வே, பிற அரசு துறைகள், மாநில அரசுகள் செலவு செய்யும். வேட்பாளர்கள் செலவு சமீபத்தில் வேட்பாளர்கள் செலவின வரம்பினை தேர்தல் கமிஷன் பரிந்துரைகளுக்கு ஏற்ப அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி குறைந்த பட்சம் ரூ.54 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம். எனவே இந்த செலவுகளையெல்லாம் கணக்கில் கொண்டால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும். 543 தொகுதிகளில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் மட்டுமே ரூ.4 ஆயிரம் கோடி செலவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வு தகவல்களை ஊடக கல்வி மையத்தின் தலைவர் பாஸ்கரராவ் வெளியிட்டு பேசுகையில், ‘‘சமீப காலம் வரை அரசியல் கட்சிகள் அதிகளவு செலவு செய்து வந்தன. இப்போது அரசியல் கட்சிகளை விட வேட்பாளர்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள். கோடீசுவர வேட்பாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள் பெருந்தொகை செலவிடுவர்’’ என கூறினார்.


Close (X)

வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 71
6

இந்தியாவில் இதுவரையில் இல்லாத ஒரு பரபரப்பு, இந்த பாராளுமன்ற தேர்தலையொட்டி இருக்கிறது. வரப்போகும் பிரதமரிடமும், மத்திய அரசாங்கத்திடமும் நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்பதுதான் முதல் எதிர்பார்ப்பாக இருந்தாலும், அடுத்து விலைவாசி உயர்வு தடுக்கப்படவேண்டும், ரூபாயின் மதிப்பு உயரவேண்டும், பொருளாதாரம் சீர்பெற வேண்டும், வேலை இல்லா திண்டாட்டம் போக்கப்படவேண்டும், அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அடுக்கடுக்காக அடுத்த அரசாங்கம் செய்யவேண்டும், அந்த அரசாங்கத்துக்குத்தான் ஓட்டுப்போடவேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து, அதையெல்லாம் எந்த கட்சி செய்யும்? என்று தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முடிவு எது? என்பதை மே மாதம் 16–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை காட்டிவிடும். அவர்களின் நம்பிக்கையைப் பெறத்தான் ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறது. தமிழக மக்களைப் பொருத்தவரையில், தமிழ்நாட்டுக்குரிய சில பிரச்சினைகளும் இருக்கின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அனைவரையும் உலுக்குவது விலைவாசி உயர்வுதான். அதிலும், உணவு பண்டங்களின் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ரூபாயின் மதிப்பு மளமளவென்று குறைவதும், பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது உயர்ந்துகொண்டிருப்பதுமே முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. கடந்த 2 ஆண்டுக்குள் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 18 ரூபாய் உயர்ந்திருக்கிறது. 2012–ம் ஆண்டு மே மாதம் ஒரு லிட்டர் டீசல் விலை 40 ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.58.56 ஆகும். உணவு பொருட்கள், காய்கறிகள், பால் உள்பட அனைத்து பொருட்களையும் லாரிகள் மூலம்தான் எடுத்துச்செல்ல வேண்டிய நிலையில், இந்த டீசல் விலை உயர்வு, அந்த பொருட்களை ஏற்றிக்கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவை அதிகரிக்க வைத்து, அதன் காரணமாக அந்த பொருட்களின் விலையை உயர்த்திவிடுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவோ அதற்கேற்பத்தான், விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்லலாம். ஆனால், கச்சா எண்ணெய் விலையைவிட, நம் நாட்டில் வரி அதிகமாக இருப்பதுதான் விலையை ஏற்றிவிடுகிறது. அடுத்து, ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும் கவலை அளிக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பு குறைகிறது என்றால், அதன் பாதிப்பு ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையிலும் பிரதிபலித்துக்கொண்டு இருக்கிறது. அவன்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறான். சர்வதேச கரன்சியான அமெரிக்க டாலரை வாங்க எவ்வளவு ரூபாய் செலவழிக்க வேண்டும் என்பதை வைத்துத்தான், ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. 1947–ல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், ஒரு அமெரிக்க டாலரை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. 1966–ல் ரூ.6.35 ஆகவும், 1975–ல் ரூ.8.41 ஆகவும் இருந்த டாலரின் விலை, தற்போது ஏறத்தாழ 61 ரூபாய்க்கு வந்துவிட்டது. இதன் பாதிப்பு சாதாரண ஒரு குடும்பத்துக்கு எப்படி ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம், 1968–ல் ஒரு ரூபாய்க்கு 12 முட்டைகளுக்கு மேல் வாங்க முடிந்தது. ஆனால், இன்று 12 முட்டைகளை வாங்க ஏறத்தாழ 50 ரூபாய் வரை ஆகிறது. இதேபோலத்தான், அனைத்து பொருட்களின் விலையும் விண்ணைத்தொடும் அளவுக்கு இருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்து இருப்பதால், நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது என்பதில் மகிழ்ச்சி இருந்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை, ஏற்றுமதியைவிட, இறக்குமதிதான் அதிகம் என்கிற வகையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்கவேண்டியது இருக்கும். இதனால் ஏற்படும் பொருட்களின் விலை உயர்வு, ஏழை, நடுத்தர மக்களைத்தான் அதிகம் பாதிக்கும். எனவே, அடுத்த அரசாங்கம் இந்த விஷயத்தில் நிறை, குறைகளையெல்லாம் வந்தவுடனேயே ஆராய்ந்து, விலைவாசி உயர்வை பெருமளவில் குறைக்கும் நடவடிக்கைகளை எடுப்பதுதான் நல்லாட்சி. அத்தகைய ஆட்சியின் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கையை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்கவேண்டும் என்பதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 73
7

நேற்றைய போராட்டத்தில் ஆயுதம் சுமந்தவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க களம்பல கண்டவர்கள் இன்று தேடுவார் யாருமின்றி ...! முதலைக் கண்ணீர் விட்டு அவர்களின் பிரச்சினைகளை அரசியல் ஆக்கியவர்கள், வாய்திறக்க மறுக்கிறார்கள் சூழ்ச்சி பலசெய்து அவர்களைத் தோற்கடித்துவிட்டு..! பதவிக்கும் பட்டத்திற்கும் ஆசைப்பட்டு கொள்கைகளை மறந்தவர்கள் காட்டிக்கொடுப்பிற்குப்பின் கண்ணியவானாக காட்டிக்கொள்ளமுயல்கிறார்கள் கன்னிகளுடன் கூத்தடித்துக்கொண்டு ...! நேற்றைய போரின் கதாநாயகர்கள் `புனர்வாழ்வு` எனும் சித்திரவதைக்குப் பின் வாழ வழியின்றி வாழ்வை முடித்துக்கொள்கிறார்கள் மனக்குழப்பத்தோடு ....! தங்கத்தலைவன் வழிகாட்டுதலில் சாதனைகள் பலபடைத்த சரித்திர நாயகிகள் ஒதுக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் `யார் காப்பார் எம்மை இனி ` என்று பெருமூச்சுவிடுகிறார்கள்...! `யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே ...` சரித்திர நாயகரின் இன்றைய நிலை பார்த்தபின் ஞாபகத்திற்கு வருகிறது கண்ணதாசனின் வரிகள் ...! நேற்றைய போரில் இலட்சியம் மட்டுமே இதயத்தில் இருக்க இன்றோ பயமுறுத்தும் நிகழ்காலம் நிச்சயமற்ற எதிர்காலம் எல்லாவற்றையும் கேள்விக்குறியாக்கி .....! கொடுங்கோலன் ஆட்சியிலே மாறிய காட்சிகள் மாறாத எண்ணங்கள் இருப்புக்கும் இழப்புக்கும் மத்தியில் விடைகாணமுடியாத கேள்விகளாய் ...! பதவிக்கும் சுயலாபங்களுக்கும் ஆசைப்பட்டு நம்பிக்கைத் துரோகியாகும் பலருக்கு மத்தியில் விசுவாசமாயிருந்த இவர்களின் நிலை வெளிச்சத்தைக் காண்பது எப்போது ....!? ==================== தோழி துர்க்கா


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 89
7

மறவன் என்று வாயாற சொல்லிச் சொல்லி - தமிழன் மரம் இணையாய் ஆகி விட்டான், ஐயோ பாவம்! பழம் பெருமை ஒன்றுதானே இவன் சொத்து - இவன் பகுத்தறிவை வெறுக்க பழகிக் கொண்ட வித்து. ஒற்றுமையாய் வாழ நீங்கஓடிவாங்க - என்று உளமாற அழைத்தாலும் உணர நினையான் பித்தராய் மேடையில் பிதற்றுபவனை - உடனே பெருமைப்படுத்த சிரமப்பட்டு உபசரிப்பான். எத்தர்களை பகைத்துக்கொள்ள விழையான் - மேலும் எத்தனைதான் பட்டாலும் ஏற்றமுற நினையான் கத்துவான் கால்பிடிப்பான் கதிஎன்பான் - ஆனால் கணப்பொழுதும் தனை உணர கருதமாட்டான். பிள்ளை, பெண் பெருமைதனைப் பேசமாட்டான் - ஆனால் பிறராயின் புகழ்பாட தயங்க மாட்டான் கல்லுக்கும் கட்டைக்கும் உடல்வறுப்பான் - ஆனால் கணப்பொழுதும் இனஏற்றம் விழையமாட்டான். பிரிந்துவாழும் மனப்பாங்கே இவன் பண்பு - மேலும் பிரிப்பவனைத் துதிப்பாடல் இவன் செய்யும் தொண்டு தான்உயர நேரம்வரின் தயக்கம் காட்டுவான் - ஆனால் தளராமல் உயர்த்திவிட தன்உடலை வளைப்பான். சாக்கடைதான் இவனுடலில் பாய்கின்றதோ!-அல்லது சவத்திலேதான் செந்நீரும் தவிக்கின்றதோ! பகுத்தறிவே! நீ நுழைய வழியில்லையோ! - அல்லது இந்தப் பாழ் இனத்தைக் காப்பாற்ற மனமில்லையோ! - பொன்பரப்பியான்-


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 87
3

சாதிகளால் தூசுபடிந்த சமூகத்தை சமத்துவ தூரிகை கொண்டு மாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர்களே..! சாதி பெயர் சொல்லி உமிழ்ந்தவனை தண்டனைக் கயிறால் பிணைத்து புரட்சியை விதைத்தவர்கள் அவர்களே ...! முப்படையை வீரமுடன் உருவாக்கி முப்பது வருடமாய் கண்ணியமாய் போரை வழிநடத்தியவர் அவர்களே ..........! நள்ளிரவிலும் காமுகர் பயமின்றி மண்ணின் மங்கையர் நடமாட வழிவகை செய்ததும் வீரரவர்களே ...........! பிறந்த மழலையர்க்கு தனித்தமிழில் அழகாய் பெயர் சூடி, அன்னை மொழியை உயிராய் நேசித்த எம்மவர் அவர்களே.... ..! விரோதிகளுடன் கூட்டுச் சேர்ந்து நடந்துவந்த பாதை மறந்த துரோகியரை களையெடுத்து நேராக்கியவர் அவர்களே...! உள் மனதில் துவேசம் கொண்டு பழங்கதை பேசி அரசியல் நடத்தும் உங்களை நம்பி ஏமாந்ததும் அவர்களே ......! தமக்கென பத்திரிகை, வானொலி வைத்து உண்மையை உடனுக்குடன் ஊருக்குரைத்து விடுதலைக்காய் போராடியவர் அவர்களே..! இன்று அவர்கள் இருந்திருந்தால் ஈழத்துடன் ஈழத்தவர் எமக்கென ஒரு `தமிழ்த்` தளமும் வளர்ச்சியின் உச்சமாய் திறந்திருப்பார் ........! `அகதி` என்றவனின் செவிடு பறக்க ஓங்கி ஒரு அறை விட்டிருப்பார்...... எல்லாமிழந்து நிர்க்கதியாய் நிற்கின்றோம்...! அரசியல் சூத்திரவாதியின் வழிகாட்டலில் ஏவி விட்ட செல்லப்பிராணிகள் இரக்கமின்றி எமை குதறிக்கொண்டிருக்க, விடியலைத் தொலைத்துவிட்டு அவர்களை எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.! ஓ..ஆண்டவனே...எனக்கொரு சக்தி கிடைத்தால் மாண்ட சரித்திர நாயகர் அவர்களை மீண்டும் உயிராக்கி மண்ணாவேன் நான் ........!!!!


வழி : Neppolian கருத்துகள் : 0 பார்வை : 74
2

மரபுகளை விழுங்கி மக்களைத்தின்று மகிழும் பாலைவனக் காட்டேரிகளின் குப்பைச் சிந்தையில் குடியிருக்கும்-- -------குரூரப் புத்திகளைக் -------கிழித்தெறிய விரக்தியில் -------கத்துகிறது என் விரல்கள் ! மண்ணை வைத்துக் கணித்தாலும் மனத்தை வைத்துக் கணித்தாலும் -------மரபுகள் இழந்த அரபிகள் -------பாலைகள் என்பதில் -------ஐயமில்லை ! வாழ வக்கின்றி கடல்தாண்டி ஓடிவந்து வாடிமடியும் ஏழைகளின் கனாக்களை, வினாக் குறியாக்கி உயிர்ப்பிடுங்கி உதிரம்சப்பும் -------ஓநாய்க் கூட்டங்களே- -------உங்கள் உடம்புக்குள் ஓடுவதும் -------எரிபொருளா ? புழுக்களுக்கு கொடுக்கும் மரியாதைக்கூட இல்லாமல் எங்கள் பெண்டிரைக் குழுக்களாய் தின்றுதீர்த்து வீதியிலும் கடலிலும் -------வீசியெறியும் வெறிநாய்களே- -------மனிதம் ஒருகிராம் -------உங்களூரில் என்னவிலை ? அப்பாவிக் கன்னிகளைத் தின்றுவிட்டு, திருடியென்றும் விபச்சாரியென்றும் பட்டம் சூட்டிக், கல்லடித்துக் கொல்லுகின்ற -------புலால்தின்னிக் கழுகுகளே- -------பன்னிகளைத் தின்றால் ஹராம் என்கிறீர்களே -------கன்னிகளின் உயிர்த்தின்னுவது ஹலாலா? அல்லல் தணிக்க அலைகடல்தாண்டி வரும் ஆசிய அபலைகளிடம் சூரத்தனம் காட்டுகின்ற -------அயோக்கிய நரிகளே- -------அமரிக்கனிடமும் பிரிட்டிஷ்ஷிடமும் -------ஏன் இல்லை இந்த ஆட்டம் ? -------தொங்கவிடுவான் என்ற பயமா ? மூவேளைச் சோற்றுக்கு மொத்தமும் துறந்துவிட்டு கடல்தாண்டி வருபவளை கற்பழித்துக் கொல்லும் -------கழிச்சடை ராஜாக்களே-நீங்கள் -------செய்வதெல்லாம் பாவம்- செய்துவிட்டு -------ஐவேளை தொழுதென்ன லாபம் ? பணத்தின் வைப்பாட்டியாய்ச் சட்டமொன்றை வைத்துக்கொண்டு ஊருக்கு ஒருநீதியும் ஊருக்குவந்த ஏழைக்கு - ஒரு நீதியும் சொல்லும் -------பாலைவனக் காட்டேரிகளே- -------காசில்லாதவனுக்கு மட்டுமா -------கழுத்தறுக்கும் உன் சட்டம் ? பணிப்பெண்களாய் அங்குவந்து – பிணங்களாய், பிணிப்பெண்களாய் பிறந்தவூர் நோக்கித் திரும்பிவரும் ஏழைகளின் சாபங்கள் ஒருநாள்... -------எரிபொருளைவிட வேகமாய் -------கோழைகள் உங்கள் -------குலத்தையே எரிக்கும் ! ===================== கே.எஸ்.கலை


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 68
2

கைகோர் தமிழா கைகோர் கைகோர் தமிழா கைகோர் இந்த பூமியில் வாழ கைகோர். தூய தமிழனாய் வாழ கைகோர் உழுதுண்டு வாழ்ந்தவர் நாங்கள். அதை உலகுக்கு தந்தவர் நாங்கள். நிலம் இன்றி அகதியாய் சிறுபான்மை சின்னமாய் நாங்கள் மூத்தவர் ஆண்டு சென்றுவிட வந்தவர் நாம் மெளனியாய் அடிமையாய் தொடர்கின்றோம் எட்டு கோடியாய் உள்ளோம் எட்டி உதைத்திட ஒன்று சேர்வோம் பூமியில் திசையெங்கும் வாழ்கின்றோம் சொந்தமாய் நிலம் ஒன்று சேர்ப்போம் தொழுது நாம் வாழ்ந்த கோவில் அங்கு குண்டுகள் வீழ்கின்றது இன்று சிறு துண்டு தசைகளாய் வீழ்ந்து சாகிறான் தமிழன் தினமும் நிலாச் சோறு உண்ட முற்றம் அங்கு வீசுகின்றது இரத்தத்தின் நாற்றம் மெல்ல வருடிய தென்றலில் நாளும் அவலமாய் செத்தவன் கூக்குரல் இன்பமாய் விடிந்த காலை கொலையும் களவுமாய் விடிகின்ற நாட்கள் செம்மொழி பேசினால் தமிழன் சிறையில் எண்ணிடும் நாட்கள் வடக்கிலும் கிழக்கிலும் வாழ் நாள் முண்டமாய் பைக்குள் வீதியில் பிஞ்சு குழந்தைகள் முன்னே இரத்த வெள்ளத்தில் தந்தை பெற்ற தாய்க்கு முன்னே துப்பாக்கி குண்டேந்தி தனையன் தெய்வமாய் போற்றும் பெண்கள் தம் வாழ்க்கையை தொலைத்த பின் தனியே கூடவே சுற்றிய நண்பன் கோணிப்பைக்குள் பிணமாய் புத்தக பையுடன் சென்ற சிறிதொன்று கிணற்றுக்குள் பிணமாய் மண முடித்து ஆறாம் நாள் காணாமல் போன கணவன் தமிழுக்கு வாலாட்டிய நாய்க்கு துப்பாக்கி ரவையே பரிசாம் இன்னும் வெறுமையாய் ஏன் ஒதுங்கி ஓடுகிறாய் இழப்பையே இருப்பாக்கி மெளனியாய் தொடர்கிறாய்.?? மரம் வெட்ட தடையுண்டு தமிழனை வெட்டபரிசு உண்டாம். வன்னியின் வான் பரப்பில் வல்லூறு எச்சங்கள் அதிகாலையில் ஆனந்த பறவையின் குரல் கேட்டு கண்விழித்தோம் ஆனால் இன்று இடியாய் அதிரும் பல்குழல் ஒலி கேட்டு தேடுகிறோம் பதுங்குகுழியை கண்சிமிட்டும் நட்சத்திரத்தை கண்சிமிட்டாமல் பார்த்திருந்தோம்.... ஆனால் இன்று கண்சிமிட்டும் நேரத்தில் வான் இயந்திரத்தின் வக்கிர தேசமாய் மாறும் காலாற நாம் நடந்த வயல் காடு கண்ணிவெடி விளையும் வயலாய் இன்று நெல்லரிசி சோறுமாய் ஒடியல் பிட்டுமாய் உரம் ஏற்றிய உடம்பு புழுப்பிடத்த அரிசிக்காய் நீண்ட வரிசையில் நடு வெயிலில் குருவிக்கு கூட கூடு உண்டு தமிழா உன் பிஞ்சுக்கு நாடு உண்டா.??? பாதச்சுவட்டை பதித்திடு ஒரு திசையிட்டு கைகளை நீட்டி கைகோர்த்து வந்திடு புள்ளியாய் உள்ள மண்ணை புனிதமாய் காத்து புதுயுகம் படைக்க வீரமாய் புறப்படு தமிழா.....!! #################### படைத்தவர்- எஸ்.வி.ஆர்.பாமினி


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 63
4

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே