மண்ணை நாம் மதிக்கவில்லை.. === செயற்கை உரத்தால் தொலைத்தோம்..! மலைகளை நாம் விடவில்லை.... === வெடிகள் வைத்து பொடித்தோம்..! மரங்களை நாம் பார்க்கவில்லை... === மதி தொலைத்து முறித்தோம்..! கடலை நாம் காணவில்லை... === விஷ கழிவை கலந்தோம்..! சுவாசிக்கும் காற்றை நாம்.. === சுற்றி சுற்றி புகைத்தோம்..! வானத்தை நாம் ரசிக்கவில்லை... === பெரும் ஓட்டை போட்டோம்..! பூமியின் கோபம் பூகம்பமாய்... மலையின் கோபம் மண்சரிவாய்.. மரத்தின் கோபம் மழையின்மையாய் கடலின் கோபம் சுனாமியாய்.. காற்றின் கோபம் கடும் புயலாய்.. வானத்தின் கோபம் வெப்பமாய்.. மனிதா மனதில் குறித்துக்கொள்.... சுற்றும் சூரியன் நடுப்பகல் நின்றால்...! மாலை இரவு இங்கு வந்திடுமா..? பறவைகள் கூட்டம் திரும்பிடுமா..? மிளிரும் நிலவு குளிர் தந்திடுமா ..? சாந்த உறக்கம் கண் துஞ்சிடுமா..? காதல் உறவில் களிப்பில்லை கடிகார தியதி உண்மையில்லை கோவிலில் இரவு பூசையில்லை கோவில் நடையும் மூடலில்லை காலை சேவல் கூவவில்லை கறவைபசு பால் தருவதில்லை பிறந்த குழந்தைக்கு தியதியில்லை பின்தியதி காசோலை பலனுமில்லை திருடனுக்கிங்கு பிழைப்பு இல்லை விசாரணை கைதி சாவு இல்லை சாராயம் குடிக்க பாதை இல்லை கொள்ளை நடக்க வாய்ப்பு இல்லை கணினிகளும் மெய் சொல்லவில்லை..! இரவு விடுதிகள் திறக்கவில்லை இரவு ராணிகள் மயக்கம் இல்லை மந்திரவாதிகள் மகிழ்ச்சி இல்லை வட்டி கொடுத்தவன் வசூல் இல்லை திருமணம் இங்கு ஏதும் இல்லை முதல் இரவுயென்ற வார்த்தை இல்லை இயற்கையை சிதைக்க சிந்திப்பாயா..? இப்படி நடந்தால் நீ தாங்கிடுவாயா..? இந்த சூரியன் நடுபகல் நின்றுவிட்டால்..?


வழி : குமரிப்பையன் கருத்துகள் : 0 பார்வைகள் : 68
1
Close (X)




புதிதாக இணைந்தவர்

மேலே