உக்கிர வன்மம் கொண்டு அக்கிரமங்கள் புரியும் மனிதவுரு நரமாமிச உண்ணி சுற்றி வருகுது நரபலியெடுக்க நாடகமாடுது! /-/ சத்தியக் கண்களையெல்லாம் அசத்திய அலகால் அசாத்தியமாக கொத்திக் குதறி கொக்கரிக்குது விசமதை வீரியமாய் கொப்பளிக்குது! /-/ ஆறாம் அறிவு மேதையென்று ஐந்தாம் அறிவிலே பாடம் நடத்துது சிந்தை சீர்தூக்கிப் பார்க்காமலே அகந்தையில் ஆட்டம் போட்டலையுது! /-/ நீதிக்குப் பின்னால் நிழல் காட்டுது ஆதிக்க வெறியால் தலை நீட்டுது போதிக்கு கீழமர்ந்து போதிக்குது பாதி பித்தினில் புத்தர் வேசம் கட்டுது! /-/ பிணம் தின்ன வாய் பிளக்குது இனம் பார்த்து ருசி பார்க்குது ருசி பார்த்தபின் ஏப்பம் விடுது பசியில் மீண்டும் மோப்பம் பிடிக்குது! /-/ உச்ச விழிப்புணர்வு இல்லாது போக மிச்ச உயிர்களும் இல்லாது போகும் பிணந்தின்னி கழுகை விரட்டிட இணக்கத்தில் இணைவது அவசியமே! உலக நடப்பு


வழி : நாகூர் கவி கருத்துகள் : 0 பார்வைகள் : 56
1
Close (X)




புதிதாக இணைந்தவர்

மேலே