புகையும் உள்ளத்தில் பகை கொண்டலையும் சுயநலப் பேய் பிடித்த தமிழா நீ தமிழா...........! பற்றுள்ள வாழ்வில் பதவி ஆசையுடன் பல்லக்கில் பவனிவரும் தமிழா நீ தமிழா.............! நீதியைப் புதைத்துவிட்டு காவலனே துகிலுரிகின்றான் கூடப் பணிபுரியும் பெண்ணை தமிழா நீ தமிழா .............! மண்பற்று உள்ளவன் விண்ணாளச் சென்றுவிட பெண் பித்தனெல்லாம் மண்ணாள்கின்றான்.......! சாவைக் கண்டஞ்சாது வீரமரணத்தை தேடிச்சென்ற மறவரின் தியாகத்தை மனம்கொள்வாய் தமிழா.! ஒரே மொழி பேசும் உன்னிடத்திலேயே ஆயிரம் வேற்றுமைகள் எண்ணற்ற துவேசங்கள்....! வேறு மொழி பேசும் இனவாத சிங்களவன் எப்படிப் புரிந்துகொள்வான் உண்மை நிலையை தமிழா.! சிங்களவனெல்லாம் கெட்டவனுமல்ல தமிழனெல்லாம் நல்லவனுமல்ல ....... நல்லெண்ணத்தை விதைத்தால் புரிந்துகொள்வாய் உண்மையை தமிழா.!!! ====================================== தோழி துர்க்கா


வழி : susaana கருத்துகள் : 0 பார்வைகள் : 76
3
Close (X)




புதிதாக இணைந்தவர்

மேலே