மரபுகளை விழுங்கி மக்களைத்தின்று மகிழும் பாலைவனக் காட்டேரிகளின் குப்பைச் சிந்தையில் குடியிருக்கும்-- -------குரூரப் புத்திகளைக் -------கிழித்தெறிய விரக்தியில் -------கத்துகிறது என் விரல்கள் ! மண்ணை வைத்துக் கணித்தாலும் மனத்தை வைத்துக் கணித்தாலும் -------மரபுகள் இழந்த அரபிகள் -------பாலைகள் என்பதில் -------ஐயமில்லை ! வாழ வக்கின்றி கடல்தாண்டி ஓடிவந்து வாடிமடியும் ஏழைகளின் கனாக்களை, வினாக் குறியாக்கி உயிர்ப்பிடுங்கி உதிரம்சப்பும் -------ஓநாய்க் கூட்டங்களே- -------உங்கள் உடம்புக்குள் ஓடுவதும் -------எரிபொருளா ? புழுக்களுக்கு கொடுக்கும் மரியாதைக்கூட இல்லாமல் எங்கள் பெண்டிரைக் குழுக்களாய் தின்றுதீர்த்து வீதியிலும் கடலிலும் -------வீசியெறியும் வெறிநாய்களே- -------மனிதம் ஒருகிராம் -------உங்களூரில் என்னவிலை ? அப்பாவிக் கன்னிகளைத் தின்றுவிட்டு, திருடியென்றும் விபச்சாரியென்றும் பட்டம் சூட்டிக், கல்லடித்துக் கொல்லுகின்ற -------புலால்தின்னிக் கழுகுகளே- -------பன்னிகளைத் தின்றால் ஹராம் என்கிறீர்களே -------கன்னிகளின் உயிர்த்தின்னுவது ஹலாலா? அல்லல் தணிக்க அலைகடல்தாண்டி வரும் ஆசிய அபலைகளிடம் சூரத்தனம் காட்டுகின்ற -------அயோக்கிய நரிகளே- -------அமரிக்கனிடமும் பிரிட்டிஷ்ஷிடமும் -------ஏன் இல்லை இந்த ஆட்டம் ? -------தொங்கவிடுவான் என்ற பயமா ? மூவேளைச் சோற்றுக்கு மொத்தமும் துறந்துவிட்டு கடல்தாண்டி வருபவளை கற்பழித்துக் கொல்லும் -------கழிச்சடை ராஜாக்களே-நீங்கள் -------செய்வதெல்லாம் பாவம்- செய்துவிட்டு -------ஐவேளை தொழுதென்ன லாபம் ? பணத்தின் வைப்பாட்டியாய்ச் சட்டமொன்றை வைத்துக்கொண்டு ஊருக்கு ஒருநீதியும் ஊருக்குவந்த ஏழைக்கு - ஒரு நீதியும் சொல்லும் -------பாலைவனக் காட்டேரிகளே- -------காசில்லாதவனுக்கு மட்டுமா -------கழுத்தறுக்கும் உன் சட்டம் ? பணிப்பெண்களாய் அங்குவந்து – பிணங்களாய், பிணிப்பெண்களாய் பிறந்தவூர் நோக்கித் திரும்பிவரும் ஏழைகளின் சாபங்கள் ஒருநாள்... -------எரிபொருளைவிட வேகமாய் -------கோழைகள் உங்கள் -------குலத்தையே எரிக்கும் ! ===================== கே.எஸ்.கலை


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வைகள் : 68
2
Close (X)




புதிதாக இணைந்தவர்

மேலே