*******************பொய்*************** செய்யாத ஒன்றை செய்ததாய் சொல்லி பொய்யாக பேசுதல் பெருமையோ - மெய்யாக வீரம் யாதெனில் வாய்மையே ஆதலால் தீரம் வேண்டும் நெஞ்சத்து! *******************புறம்****************** இறந்த சகோதரனின் இறைச்சியை உண்பதை மறந்தும் விரும்புமோ மனம் - புறமும் புன்சொல்லும் கொடும் புன்மதியே வாழ்வின் இன்பம் அகற்றும் இவை! ********************சாபம்**************** பொறுமையை இழந்து பொங்கும் கோபத்தால் சிறுமைபுத்தியால் சிதறும் சாபத்தால் - அருமை வாழ்வது அழிவில் வாடுமே பொருந்தாசாபம் தாழ்வில் செலுத்தும் உனை! ********************அவதூறு************ கண்ணாலே காணாததை கண்டதாய் கதைகட்டி புண்படும் வார்த்தைகள் பேசாதே - தன்னாலே அனுமானித்து பேசுதல் அவதூறே தவிர்ப்போம் கணித்தலை பிறர்நலம் நாடி! ............................................................................................


வழி : அஹமது அலி கருத்துகள் : 0 பார்வைகள் : 69
0
Close (X)




புதிதாக இணைந்தவர்

மேலே