ஈரைந்து மாதம் சுமந்து வறுமையிலும் செம்மையாய் உனை வளர்த்து ஆளாக்கி துணையாய் இருப்பாயென்று கல்லூரி அனுப்பிவைத்தால் என்ன செய்கின்றாய் நீயங்கு..? பெற்றவரின் கனவுகளை புறம்தள்ளிவிட்டு - உன் ஒளிமயமான எதிர்காலத்தை புதைகுழியிலிட்டு வயதுக்கோளாறில் வலைவீசுகின்றாய் கன்னியர்க்கு ... சீரழிக்கும் சில நண்பரின் உசுப்பேத்தலில் உருமாறிப்போகிறாய் அழகில் சிறந்தவளை குறிவைத்து காதல்வலை வீசுகின்றாய் .... அவள் பணியமறுத்தால் அமிலம்தனை வீசுகிறாய் ..! காதலென்ன பஞ்சுமிட்டாயா அழுது அடம்பிடித்து - நீ வாங்குவதற்கு .... கனியாத இதயத்தை இரக்கமின்றி நீயேன் காயப்படுத்த விரும்புகிறாய் ..! பிடிக்கவில்லையெனில் கௌரவமாய் விலகிவிடு விரும்பாத இதயத்தை தூக்கி எறிந்துவிடு எதற்காக நீ அமிலமதை வீசுகிறாய்..!? உனக்குக் கிடைக்காததை நாசமாக்கிய திருப்தியில் புளகாங்கிதமடைகின்றாய்.. சிதைந்து போனது அவள் முகம் மட்டுமல்ல உன் வாழ்வும் சேர்ந்துதான் ... எல்லோர் கனவையும் தீயில் பொசுக்கிவிட்டு நிமிர்ந்து நடக்கின்றாய் எதுவுமே நடவாததுபோல...! கண்ணீரில் மிதக்கும் பெற்றவரையும் பொருட்படுத்தாமல் ...! உன் வாலிபத் திமிரில் பெண்ணைப் பெற்றவரின் கண்ணீரைப் பார்த்திருக்கமாட்டாய் பார்த்திருந்தால் மனிதனாக மாறியிருப்பாய் உன் மிருக குணம் தொலைத்து ..! -------------------------------------------------------------------- தோழி துர்க்கா
வழி : susaana கருத்துகள் : 0 பார்வைகள் : 89
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [30]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]