ஈஸ்வரன்- கருத்துகள்

அந்த புறாக்குஞ்சு வளர்ந்திருக்கும். இரு சிறகுகளாலும் இவ்வுலகை தழுவியபடி வளர்ந்திருக்கும். புறாவிற்குரிய மென்மையோடும், குருவிகளுக்குரிய துறுதுறுப்போடும் வளர்ந்திருக்கும். அந்த புறாக்குஞ்சு பறந்திருக்கும். பச்சையாய் உலகை போர்த்திக்கொண்ட வனங்களின் மீதும், நீலக்கடல்களின் மீதும், வானுயர் மலைகளின் மீதும், தன் குருவித்தோழர்களுடன் குதூகலாமாய் பறந்திருக்கும். பறந்த களைத்த பொழுதுகளில் அமர்ந்திருக்கும், இந்த கவிதையிலும் உங்கள் மனக்கூட்டிலும். அதன் சிறகுகளின் மெல்லிய வருடல்களை களிம்பாக மாற்றி உங்கள் காயத்தினையும் ஆற்றியிருக்கும்.

உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே,, சென்று பார்க்கிறேன்.

நன்றி நண்பா, சென்று பார்க்கிறேன்.

தட்டியாச்சு அய்யா.., உங்கள் கருத்திற்கு நன்றி.

சிறப்பானதொரு முன்னெடுப்பு. நானும் பங்கு கொள்ள முயற்சி செய்கிறேன்.

பாசம் எப்பயும் பழசுதேன்... பழசு எப்பயும் தேன் தேன்.....

ம்ம்ம், சரி.. சரி.. அவரவர்க்கு அதது...

வெள்ளூர் ராஜாவின் "இல்லாத ஊரில் சொல்லாத கதை"யைப் பற்றி எழுதுமாறு சின்ன வேண்டுகோள் வச்சிக்கிறேன்.

விடு விடு விடுன்னு படிக்கிறவனையும் சேர்த்து கூட்டிட்டு ஓடுற எழுத்தோட்டம் சார் உங்களுது.. மூணு கட்டுரையையும் ஒரே பதிவாகவே போட்டிருக்கலாமே,ஆசை தீர குடிச்சிருப்பேனே.... இப்போ தாகம் எடுக்குதே, நான் என்ன செய்ய?

எண்ணிக்கையா முக்கியம்?

கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் உண்மையானவர்களுக்கு சென்று சேர்வதற்கான அத்தியாவசிய தேவை சாதி சான்றிதழ்தான். அதை அநாவசியம் என்று கருதி ஒதுக்கி தள்ளிவிடமுடியாது.. சாதிப்பெயரை குறிப்பிடாமல், சாதிப்பிரிவை மட்டும் குறித்து வெளியிடலாம் என்பது என் கருத்து. சாதி , சான்றிதழில் மட்டும் இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லைதானே...

ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே...

ஆயிரம் சந்திரோதயங்கள் சேர்த்தெழுதிய சித்திரமும், அந்தியின் ராகமும், கனவுகளாய் பொங்கும் காவிரி ஆறும்... அதிரசனை, அதிஅழகு..
புன்னகையின் அர்த்தத்தை மூடும் பூவிதழின் மெளனம் இன்னொரு கவிதைக்காகவோ என்னவோ......?????

இறுதித்தேர்வு பட்டியல் குறித்த சந்தேகம் யாராவது ஒரு உறுப்பினரால் மூன்று மாதத்திற்கொரு முறை எழுப்பப்படுவது வழக்கமே. இதையெல்லாம் கண்டுக்காதீங்க நண்பரே. பரிசு போட்டி படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவற்கான பல வழிகளுள் ஒன்று மட்டுமே. நல்ல கருத்துகளிலும் தேவையான ஊக்கம் பெறலாம். நல்ல கவிதைகளை படித்து, பகிர்ந்து, படைத்து மகிழுங்கள், அங்கீகாரம் தானாய் வரும்.


ஈஸ்வரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே