கற்பகம்- கருத்துகள்

வானமாய் என் உலகில்
நீ நிறைந்து இருக்கிறாய்
காற்றாய் உன்னை
என் அருகில் உணர்கிறேன்
கண்களில் கானா முடியாமல்
தவிக்கிறேன்....
என் சந்தோஷங்களையும், சோகங்களையும்
உன்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்-
உனக்கே தெரியாமல்.....
தெரியாமலே போகின்றது,
என் ஆசைகளும்,
என் ஏக்கங்களும் உனக்கு....
கனவாக வாழ்கின்றேன்
உன் நினைவில் தவிக்கின்றேன்
காதலை மட்டும் உன்னிடம்
உணரவில்லை...
தாய்மாயும் உணர்ந்தேன்
உன்னிடமே....
காதலாக இருந்தால் உன் பிரிவை
அழுது தீர்த்திருப்பேன்....
தாயாக இருந்தால் உன் பிரிவை
தூரமாக வைத்தேன்....
தூரத்தில் என் நினைவில் நீ
வாழ்கின்றாய் என்ற
நினைவில் நான் வாழ்கின்றேன்...



கற்பகம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே