நிரஞ்சன்- கருத்துகள்

தங்களின் வெண்பா எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது

ஐயா, "இந்நாள், நன்னாள்" எதுகை ஆகுமா? யான் அறிந்தவரை அது எதுகை ஆகாதென்று நினைக்கிறேன்

ஐயா தங்களின் வெண்பா எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. ஆனால் இறுதி வெண்பாவில் யான் கண்ட சிறுபிழை ஒன்றனைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 'உன்னைபோற்ற' - இதில் கண்டிப்பாகப் பகர ஒற்று இட வேண்டும். அப்படி ஒற்றிடும்போது இலக்கணம் கெடுகிறது.

பேராசிரியர் வ.க.கன்னியப்பன் அவர்களே முனைவர் என்று குறிப்பிட்டதைப் பொறுத்துக் கொள்ளவும்🙏
ஆம். நூல்கள் மற்றும் இணையதளம் மூலமாகப் பாக்கள் எழுதப் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறேன். இயற்றத் தொடங்கிய நிலையிலே இருப்பதால், சிறந்த நயங்களைக் கையாண்டு சிறந்த நடையில் பாக்களைப் படைக்கும் திறனைப் பெற்று வளர்ப்பதற்குச் சற்று நேரம் தேவைப்படுகிறது. மற்றும், பிறமொழிச்சொற்கலப்பின்றி எழுத முயற்சிப்பதாலும் சில நேரங்களில் நயம் பொருந்திய தமிழ்ச்சொற்களைத் தேட வேண்டியதுள்ளது.

தங்களின் அன்பான கருத்துக்கும் வழிகாட்டலுக்கும் என் நன்றிகள்!

முனைவர் திரு வ.க.கன்னியப்பன் அவர்களே தங்களது கருத்தையும் மோனை பற்றிய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு என் நன்றிகள்! தங்களது பா-நடை என்னைக் கவர்ந்திழுப்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

எனினும் தாங்கள் மேற்சுட்டிய குறிப்பொன்று எனக்குப் புரியவில்லை.சீர்களைப் பொருத்துமிடத்தே சொற்களைப் பிய்த்தெழுதுவதில் தவறில்லை என்று நம்புகிறேன்.

நிரஞ்சன்


நிரஞ்சன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே