Satheeshjames- கருத்துகள்

எடுத்துக்காட்டாக, நமது தட்டில் நான்கு வகையான உணவுகள் பரிமாறப்பட்டால், நாம் நான்கு வகைகளின் ருசியறிந்து, நமக்கு பிடித்ததை, நிதானமாக சாப்பிடுவோம், குறிப்பாக அதற்கான நேரமும் நம்மிடம் இருக்கும்.

ஆனால், ஒரு பதினாறு வகையான உணவு பரிமாறப்படுமாயின், நாம் அனைத்தையும் ருசித்துக்கொண்டிருந்ததால் பந்தி முடிந்து விடும் என்பதால் விரைவாக எல்லாவற்றையும் விரைவாக எது என்னசுவை, எது என்னவகை என்று அறியாமல் உட்கொள்வது உண்டு.

ஆதலால், உங்களின் படைப்பில் ஒரு தனித்துவம் ( சுவை ) இருந்தால் மக்களால் விரும்பப்படும், ஆனாலும் அடுத்தடுத்த படங்களின் வருகை அதிகமாக இருப்பதால் சிறிது காலத்தில் அரைகுறையாக மென்று விழுங்கப்படும் உணவு போல் மாறிவிடும்.

எடுத்துக்காட்டாக, இன்னும் இரண்டு அல்லது நான்கு மாதங்களில் கடலை எண்ணையின் விலை கனிசமாக குறையுமாயின் பதுக்கல் குறைவாக உள்ளது என்று நம்பலாம். விலை குறையவில்லை என்றாலோ அல்லது அதே விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தால், அதற்கான காரணம் என்ன என்று கண்டறிய வேண்டும்.


Satheeshjames கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே