சேர்த்தவர் : Dileepan Pa, 9-Sep-17, 3:12 pm

கவிதைத் திருவிழா - கவிதைப் போட்டி

கவிதைத் திருவிழா - கவிதைப் போட்டி போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.

கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.

போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.

பரிசு விவரங்கள்

மொத்தம் மூன்று படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மூன்றும் எங்களது நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவது. அனைத்திற்கும் தலா 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.

மின்னஞ்சலின் தலைப்பு (Subject) – “கவிதைத் திருவிழா” என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்குப் பொருத்தமான ஒரு படமும் அனுப்பிவைக்க வேண்டும்.

படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.

படைப்பு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குள், எங்களுக்குக் கிடைத்ததை உறுதிப்படுத்த உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்புவோம்.

படைப்புத்தேர்வில் பிரதிலிபியின் முடிவே இறுதியானது.

தொடர்புக்கு – 9206706899

ஆரம்ப நாள் : 09-Sep-2017
இறுதி நாள் : 26-Sep-2017  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 07-Nov-2017

கவிதைத் திருவிழா - கவிதைப் போட்டி போட்டி | Competition at Eluthu.com



மேலே