எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்ன வாழ்க்கை பாவலர் கருமலைத்தமிழாழன் காலையிலே எழுந்தவுடன் கண்ணிற்...

என்ன வாழ்க்கை
பாவலர் கருமலைத்தமிழாழன்

காலையிலே எழுந்தவுடன் கண்ணிற் குள்ளே
கற்பழிப்பைக் களவுகளைக் கத்திக் குத்தை
வேலைப்போல் பாய்ச்சுகின்ற செய்தித் தாள்கள்
வேதனையை எழுப்புகின்ற வெறிக்கு ரல்கள்
ஆலையிட்ட கரும்பாக நெஞ்சு நோக
அவலத்தைக் காட்டுகின்ற கொடும்ப டங்கள்
மூலையிலே அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
முடங்கிருக்கும் இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?

கண்முன்னே வன்முறைகள் மதத்தின் பேரால்
கடவுளரை இழிவாக்கும் கூக்கு ரல்கள்
புண்செய்யும் சாதிவெறி புன்மைப் பேச்சால்
புரையோடிக் கால்கைகள் வெட்டும் சத்தம்
தண்ணீர்க்கோ தடையாணை குருதி யோட
தாராள குண்டரணி அணிவ குப்பு
கண்ணீரில் அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
கரைகின்ற இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?

சுருட்டுகின்ற அரசியலார் அதிகா ரத்தின்
சூழ்ச்சிகளில் அள்ளுகின்ற ஆட்சி யாளர்
மருட்டுகின்ற கையூட்டு வேலை யின்மை
மடைதிறந்த வெள்ளமெனத் தவறி ழைப்போர்
உருட்டிமேலே உயர்கின்ற உமிப்ப தர்கள்
உண்மையான திறனாளர் அவம திப்பு
இருட்டுக்குள் அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
இருக்கின்ற இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?


****************
என்ன வாழ்க்கை
பாவலர் கருமலைத்தமிழாழன்

காலையிலே எழுந்தவுடன் கண்ணிற் குள்ளே
கற்பழிப்பைக் களவுகளைக் கத்திக் குத்தை
வேலைப்போல் பாய்ச்சுகின்ற செய்தித் தாள்கள்
வேதனையை எழுப்புகின்ற வெறிக்கு ரல்கள்
ஆலையிட்ட கரும்பாக நெஞ்சு நோக
அவலத்தைக் காட்டுகின்ற கொடும்ப டங்கள்
மூலையிலே அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
முடங்கிருக்கும் இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?

கண்முன்னே வன்முறைகள் மதத்தின் பேரால்
கடவுளரை இழிவாக்கும் கூக்கு ரல்கள்
புண்செய்யும் சாதிவெறி புன்மைப் பேச்சால்
புரையோடிக் கால்கைகள் வெட்டும் சத்தம்
தண்ணீர்க்கோ தடையாணை குருதி யோட
தாராள குண்டரணி அணிவ குப்பு
கண்ணீரில் அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
கரைகின்ற இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?

சுருட்டுகின்ற அரசியலார் அதிகா ரத்தின்
சூழ்ச்சிகளில் அள்ளுகின்ற ஆட்சி யாளர்
மருட்டுகின்ற கையூட்டு வேலை யின்மை
மடைதிறந்த வெள்ளமெனத் தவறி ழைப்போர்
உருட்டிமேலே உயர்கின்ற உமிப்ப தர்கள்
உண்மையான திறனாளர் அவம திப்பு
இருட்டுக்குள் அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
இருக்கின்ற இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?


****************
என்ன வாழ்க்கை
பாவலர் கருமலைத்தமிழாழன்

காலையிலே எழுந்தவுடன் கண்ணிற் குள்ளே
கற்பழிப்பைக் களவுகளைக் கத்திக் குத்தை
வேலைப்போல் பாய்ச்சுகின்ற செய்தித் தாள்கள்
வேதனையை எழுப்புகின்ற வெறிக்கு ரல்கள்
ஆலையிட்ட கரும்பாக நெஞ்சு நோக
அவலத்தைக் காட்டுகின்ற கொடும்ப டங்கள்
மூலையிலே அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
முடங்கிருக்கும் இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?

கண்முன்னே வன்முறைகள் மதத்தின் பேரால்
கடவுளரை இழிவாக்கும் கூக்கு ரல்கள்
புண்செய்யும் சாதிவெறி புன்மைப் பேச்சால்
புரையோடிக் கால்கைகள் வெட்டும் சத்தம்
தண்ணீர்க்கோ தடையாணை குருதி யோட
தாராள குண்டரணி அணிவ குப்பு
கண்ணீரில் அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
கரைகின்ற இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?

சுருட்டுகின்ற அரசியலார் அதிகா ரத்தின்
சூழ்ச்சிகளில் அள்ளுகின்ற ஆட்சி யாளர்
மருட்டுகின்ற கையூட்டு வேலை யின்மை
மடைதிறந்த வெள்ளமெனத் தவறி ழைப்போர்
உருட்டிமேலே உயர்கின்ற உமிப்ப தர்கள்
உண்மையான திறனாளர் அவம திப்பு
இருட்டுக்குள் அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
இருக்கின்ற இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?


****************
என்ன வாழ்க்கை
பாவலர் கருமலைத்தமிழாழன்

காலையிலே எழுந்தவுடன் கண்ணிற் குள்ளே
கற்பழிப்பைக் களவுகளைக் கத்திக் குத்தை
வேலைப்போல் பாய்ச்சுகின்ற செய்தித் தாள்கள்
வேதனையை எழுப்புகின்ற வெறிக்கு ரல்கள்
ஆலையிட்ட கரும்பாக நெஞ்சு நோக
அவலத்தைக் காட்டுகின்ற கொடும்ப டங்கள்
மூலையிலே அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
முடங்கிருக்கும் இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?

கண்முன்னே வன்முறைகள் மதத்தின் பேரால்
கடவுளரை இழிவாக்கும் கூக்கு ரல்கள்
புண்செய்யும் சாதிவெறி புன்மைப் பேச்சால்
புரையோடிக் கால்கைகள் வெட்டும் சத்தம்
தண்ணீர்க்கோ தடையாணை குருதி யோட
தாராள குண்டரணி அணிவ குப்பு
கண்ணீரில் அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
கரைகின்ற இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?

சுருட்டுகின்ற அரசியலார் அதிகா ரத்தின்
சூழ்ச்சிகளில் அள்ளுகின்ற ஆட்சி யாளர்
மருட்டுகின்ற கையூட்டு வேலை யின்மை
மடைதிறந்த வெள்ளமெனத் தவறி ழைப்போர்
உருட்டிமேலே உயர்கின்ற உமிப்ப தர்கள்
உண்மையான திறனாளர் அவம திப்பு
இருட்டுக்குள் அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
இருக்கின்ற இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?


****************
என்ன வாழ்க்கை
பாவலர் கருமலைத்தமிழாழன்

காலையிலே எழுந்தவுடன் கண்ணிற் குள்ளே
கற்பழிப்பைக் களவுகளைக் கத்திக் குத்தை
வேலைப்போல் பாய்ச்சுகின்ற செய்தித் தாள்கள்
வேதனையை எழுப்புகின்ற வெறிக்கு ரல்கள்
ஆலையிட்ட கரும்பாக நெஞ்சு நோக
அவலத்தைக் காட்டுகின்ற கொடும்ப டங்கள்
மூலையிலே அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
முடங்கிருக்கும் இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?

கண்முன்னே வன்முறைகள் மதத்தின் பேரால்
கடவுளரை இழிவாக்கும் கூக்கு ரல்கள்
புண்செய்யும் சாதிவெறி புன்மைப் பேச்சால்
புரையோடிக் கால்கைகள் வெட்டும் சத்தம்
தண்ணீர்க்கோ தடையாணை குருதி யோட
தாராள குண்டரணி அணிவ குப்பு
கண்ணீரில் அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
கரைகின்ற இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?

சுருட்டுகின்ற அரசியலார் அதிகா ரத்தின்
சூழ்ச்சிகளில் அள்ளுகின்ற ஆட்சி யாளர்
மருட்டுகின்ற கையூட்டு வேலை யின்மை
மடைதிறந்த வெள்ளமெனத் தவறி ழைப்போர்
உருட்டிமேலே உயர்கின்ற உமிப்ப தர்கள்
உண்மையான திறனாளர் அவம திப்பு
இருட்டுக்குள் அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
இருக்கின்ற இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?


****************

நாள் : 2-Oct-14, 11:57 am

மேலே