வாழ்த்துக்கள் தேவ தேவா..! -------------------------------------------- இனித்திடும் பா புனையும்...
வாழ்த்துக்கள் தேவ தேவா..!
--------------------------------------------
இனித்திடும் பா புனையும் கவித்தேன்
சுவைத்திடும் கதை எழுதும் கதையருவி
ரசித்திடும் உரை எழுதிடும் கட்டுரைப்பூ
படைப்பு என்று இவர்
கையும் மையும் பட்டாலே
மலட்டுத்தாள்கள் எப்படியோ
கர்ப்பமடைந்து செந்தமிழை பிரசவிக்கிறது.
கவிஞனே!
நீ கவி மந்திரவாதியா ?
இலக்கிய மன்மதனா ?
விவாதம் நடத்தியே
என் ரசனைமன்றத்தில்
நீயே ஜெயித்துவிடுகிறாய்
மிகச்சிறந்த எழுத்தாளனாக.
இன்னும் இன்னும்
இனித்திடும் பல்சுவை
தமிழ்த்தேன் தந்திடு..!
இன்னும் இன்னும்
கற்கண்டுரசனையை என்
நாவில் ஏற்றிவிடு .!
முப்பதுகளின் வரிசையில்
அடுத்த அகவையில்
அடியெடுத்து வைக்கிறாய்
என் தமிழ் நண்பா.!
என் இனிய தேவா !
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
------------------------------------------
நம் தளத்திலுள்ள மிகச்சிறந்த படைப்பாளி தோழர் தேவா-அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
-இரா.சந்தோஷ் குமார்