எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடுதலைப் புலி போராளி திலீபன் வாழ்க்கை கதை படமாகிறது...

விடுதலைப் புலி போராளி திலீபன் வாழ்க்கை கதை படமாகிறது

உண்ணாவிரதம் இருந்து இறந்த விடுதலைப்புலி போராளி திலீபன் வாழ்க்கை கதை சினிமா படமாகிறது. இந்த படத்தை ஆனந்த மூர்த்தி இயக்குகிறார்.

இதில் திலீபன் கேரக்டரில் நந்தா நடிக்கிறார். விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வேடத்தில் ஸ்ரீதர் நடிக்கிறார். கிட்டு கேரக்டரில் வினோத் சாகரும் மில்லர் கேரக்டரில் பரத்தும் மாத்தையாவாக முனுசாமியும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

படம் பற்றி டைரக்டர் ஆனந்தமூர்த்தி கூறியதாவது:–

இந்திய அமைதிப்படை இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபன் வீர வாழ்க்கை மகத்தானது. அந்த மாவீரனின் வாழ்க்கையை அவர் பெயரிலேயே படமாக எடுக்கிறேன்.

ஈழத்துக்கு சென்று திலீபன் வாழ்ந்த வீடு அவருடன் பழகியவர்கள் மற்றும் உறவினர்கள் என ஆய்வு செய்து இந்த படத்தை எடுக்கிறேன். திலீபனை பிரபாகரன் சொந்த தம்பியாகவே கருதினார். உண்ணாவிரதம் இருக்க திலீபன் அனுமதி கேட்டபோதுகூட அவர் மறுத்தார். கிட்டுவுக்கும் திலீபனுக்கும் உள்ள நட்பு ஆழமானது.

ஈழத்து காந்தி என்று அழைக்கப்பட்ட திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது பிரபாகரன் கண்ணீர் விட்டு அழுதார். பிரபாகரன் அழுதது அந்த ஒருநாள் மட்டும்தான். இதையெல்லாம் படத்தில் கொண்டு வருகிறேன். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நாள் : 14-Oct-14, 6:18 pm

மேலே