எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அணையும் நிலையில் கம்யூனிஸ்டுகள் ஜீவானந்தம்,ராமமூர்த்தி,டி கே எஸ் தங்கமணி,சங்கரய்யா,...

அணையும் நிலையில் கம்யூனிஸ்டுகள்

ஜீவானந்தம்,ராமமூர்த்தி,டி கே எஸ் தங்கமணி,சங்கரய்யா, போன்ற மிக பெரிய உண்மையான தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் வேறு,தற்போது இருக்கும் கம்யூனிஸ்டுகள் வேறு

அன்றைய காலத்தில் இருந்த தலைவர்கள் நாட்டின் விடுதலை,தொழிலாளர் போராட்டம் பொது பிரச்சினை,பொதுஉடைமை என மக்களுக்காக மட்டுமே வாழ்ந்து மறைந்தவர்கள்

இப்போதைய கம்யூனிஸ்டுகள் அந்த கொள்கைகளை மறந்து விட்டனரோ என தோன்றுகிறது,

தற்போது நாட்டின் பிரச்சினைகளில் ஒருதலைபட்டமான நிலையை எடுக்க தொடங்கிவிட்டனர்,ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக போராடுவது போல் நடித்து ஓட்டுகளை பெற முயற்சி செய்து வருகிறது.

அதிலும் தமிழகத்தில் நடக்கும் பல வகுப்பு மோதல்களில் இவர்களும் முக்கிய பங்கு பெறத் தொடங்கி விட்டனர்,இளைஞர்களின் மத்தியில் இவர்கள் சாயம் வெளுக்க தொடங்கி விட்டது

ஊழல் புகார் சுமத்த முடியாத கட்சியாக இருந்தாலும் இவர்களால் ஆட்சி அதிகாரங்களை பெற முடியாததற்கு காரணம் இவர்கள் நடுநிலையானவர்கள் அல்ல என்பதனால் மட்டுமே

தற்கொலையை தூண்டி கொலையாக மாற்றுவது, பிரச்சினைகளில் இறந்தவர் என்ன ஜாதி என கேட்டறிந்து பின்னர் பிரச்சினையை கையில் எடுப்பது,மேலும் பல ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்து தன் நிலையை தானே குறைத்து விட்டது

தடை செய்ய வேண்டிய கட்சியாக மாற வேண்டிய சூழல் வந்தாலும் வரும்..

நாள் : 23-Oct-14, 11:19 pm

மேலே