எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒளவையார் (avvaiyaar) நாலு கோடிப் பாடல்கள்! ஒளவையார் ஒரு...

ஒளவையார் (avvaiyaar) நாலு கோடிப் பாடல்கள்!

ஒளவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார். நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள் இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம் என்று அவர்கள் கூறினராம். இதைக்கேட்ட ஒளவையார், இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள் என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும்.

நூல்
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்

உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்

கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்

கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்

நாலு கோடிப் பாடல்கள் முற்றிற்று.

பதிவு : கீத்ஸ்
நாள் : 12-Nov-14, 3:34 pm

மேலே