--------புத்தாண்டுக் கருத்து------- ----தேவை கருதி எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ...
--------புத்தாண்டுக் கருத்து-------
----தேவை கருதி எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு சென்றுதான் பொருளீட்ட வேண்டும் . அது பாலூட்டி வளர்த்த அன்னையின் வயிற்றில் பால் வார்க்கும் .
ஊரை விட்டு வெளியேறி உடலுழைப்பை நம்பி அரபு நாடுகளிலும் மத்திய கிழக்கு
நாடுகளிலும் பணிபுரியும் எண்ணற்றவர்கள் வீட்டில் விளக்கு எரிகிறது ;அடுப்பு எரிகிறது கண்ணீரிலும் உணர்ச்சி வசப்பாட்டிலும் யதார்த்த பாதையிலிருந்து விலகிப் போய்விடக் கூடாது .
படித்தவர்களும் பல வெளிநாடுகளிலும் சென்று பணிபுரிகிறார்கள் .
பொருளீ ட்டுகிறார்கள் . பணம் அனுப்புகிறார்கள். அந்நிய செலாவணி தன தாய்
நாட்டிற்கு கிடைக்கிறது
யாதும் ஊரே . யாவரும் கேளீர் .இந்த பரந்த மனப்பான்மையால்தான் தமிழர்கள்
எங்கும் உயர்ந்து நிற்கிறார்கள் .
புதிய உதயத்தை நோக்கி
புதிய பாலை பசுஞ் சோலையை நோக்கி
பயணிகளின் ஒட்டகக் கூட்டம் நடந்து கொண்டே இருக்கிறது !
-----புத்தாண்டு வாழ்த்துக்களுடன் கல்பனா பாரதி . .