எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பூரிப்பின் உச்சத்தில் என்மனம் பறந்திடச், செய்வதறியாது திகைத்து நிற்கின்றேன்...

பூரிப்பின் உச்சத்தில் என்மனம் பறந்திடச், செய்வதறியாது திகைத்து நிற்கின்றேன் தங்கள் முன்னால். துபாய் தமிழர்சங்கம் நடாத்திய "இது ஒரு கவிக்காலம்" என்னும் உலகளாவிய கவிதைப் போட்டியில் பங்கேற்று முதலிடம் என்னும் முத்தன இடத்தை வென்றுள்ளேன். ஏதும் அறியாத இந்தச் சின்னப் பயலுக்கு முதல் பரிசாகக் 4 கிராம் தங்கக் காசுகள் கொடுத்ததோடு அல்லாமல் "வித்தக இளங்கவி" என்னும் பட்டம் வேறு வழங்கிஉள்ளது. :) எனக்கு இத்தகு பெரும் அங்கீகாரத்தை வழங்கிய துபாய் தமிழர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிப் பூக்களை உதிர்க்கிறேன். என்னை இவ்வளவு உயர்த்திய மாஞ்சா நூற்களான எனது ஆசான்களையும் பாதம் பணிந்து போற்றுகிறேன்.

-விவேக்பாரதி

நாள் : 20-Jan-15, 11:00 pm

மேலே