எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்களாள் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்யுங்கள். என்றைக்கும்...

உங்களாள் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்யுங்கள். என்றைக்கும் பிறரோட கண்ணீர்க்கு நீங்கள் காரணமாக இருக்க கூடாது அது நம்மை வாழவைக்காது. நாம் வாங்கிய பட்டபடிப்பு நமக்கு வாழ்க்கையை சொல்லிக்கொடுக்கவில்லை நம்முடைய அனுபவம் சொல்லிக்கொடுக்கும் பாடத்தை விட சிறந்தது இல்லை இதை புரிந்துகொண்டால் நாம் அடைந்த தோல்விகளை வெற்றியாக மாற்ற முடியும். நேரத்தை வீணாக்காமல் பயணத்தை தொடருங்கள். ஒரு வேண்டுகொள் நாம் உணவுகளை வீணாக்க வேண்டாம். ஹோட்டல், ரெஸ்டாரன்ட் போன்ற இடங்களில் சாப்பிட முடியவில்லை என்றால் அதை பார்சல் செய்து ரோட்டோரங்களில் உணவில்லாமல் வாடும் அவர்களுக்கு கொடுங்கள் இது போன்ற சின்ன உதவியை நாம் செய்யலாமே.
இப்படிக்கு
உங்கள் தோழி
எஸ்.பி.ஆர்

பதிவு : எஸ்பிஆர்
நாள் : 23-Jan-15, 1:37 am

மேலே