என்னமோ தெரியலை !எண்ணமே வரவில்லை கண்ணமோ கவிதையோ ஒண்ணுமே...
என்னமோ தெரியலை !எண்ணமே வரவில்லை
கண்ணமோ கவிதையோ ஒண்ணுமே புரியலை
கணினிக்கு முன் வருவதற்கு முன்வரை
சொல்லடை சிலேடையாக துள்ளும் மனதுக்குள்
ஒவ்வொன்றாய் செதுக்க நினைக்கையில் ஒண்ணுமே வரவில்லை
மொத்தமாய் வந்து ஸ்தம்பிக்குது! மனம் மட்டும் தும்பியாய் அலையுது
மாறிடும் பருவநிலை போல் காரிருள் சூழ்ந்தே காட்சியாய் தெரியுது !
ஆதலால் கவிதைக்கு சில மணித்துளிகள் ....மின்வெட்டு !