எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அரிதாரம் முன்னிரவுகளில் மின்மினிகள் அங்கொன்றும் இங்கொன்றும் பறந்து பகல்...

அரிதாரம்

முன்னிரவுகளில்
மின்மினிகள்
அங்கொன்றும்
இங்கொன்றும் பறந்து
பகல் பட்டாம் பூச்சிகளை
போருக்கு அழைத்தன
விசுவாமித்திர தவங்கள்
வேதனையில் முடிந்து
நிசப்த வரங்களுக்கு
முற்றுப்புள்ளி இட்டுச் செல்லும்
ஊடகச் சாலையில்
பதிவுத் தாள்களுக்கு
கருணைப் போர்வை போர்த்திடினும்
அவர்களின்
கை கலங்களின் மை
கருப்பு விபச்சாரத்தைக் கொட்டும் .
மரம் நடுவதற்காக
மழைக் காடழித்து
சகாராவை
வருட குத்தகை எடுத்தவர்கள்
மழை விருது பெற்றார்கள்.
மழை விழுந்த போது
அது
ஆனந்தக் கண்ணீர் இல்லை
வானப் பெண்ணின்
அழுகைக் கண்ணீரென்று
எத்தனை பேருக்குத் தெரியும்.

சுசீந்திரன்.

நாள் : 10-Feb-15, 12:43 pm

மேலே