எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தப் பறவையின் வானம் நிறங்கள் தாண்டியவை.... உதிர்கின்ற ஒவ்வொரு...

இந்தப் பறவையின் வானம்
நிறங்கள் தாண்டியவை....
உதிர்கின்ற ஒவ்வொரு இறகிலும்
அன்பை மட்டுமே விதைக்கும்...
மனங்களின் தொடுவானம்,
வந்து போகும் சாரலுக்கு தெரியுமா...
அடைத்துக் கிடக்கும்
ஜன்னலின் வழிகளின்
நேசக்கரம் நீட்டும் விழிகளின்
தாய்மை.......
சாரல் பெருமழையாகும் போது
கண்ணீர் சொல்லும்
கண்ணாடி ஜன்னலின்
ஊடுருவளாய்.....
இருந்தும் இருந்தும்
பறந்தே போவதாக
தோன்றும்
வானத்தில்
இன்னோர் வெண்ணிலா
பிறந்த நாள் கொண்டாட
நான் அண்ணாந்து பார்ந்து கை தட்டுகிறேன்....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ப்ரியா...

பதிவு : கவிஜி
நாள் : 19-Mar-15, 10:47 am

மேலே