எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

http://eluthu.com/kavithai/239912.html இந்த தொடுப்பில் உள்ள கதையினை படியுங்கள். அதன்...

http://eluthu.com/kavithai/239912.html

இந்த தொடுப்பில் உள்ள கதையினை படியுங்கள். அதன் பிறகு தொடருங்கள் என்னுடைய எண்ணத்தினை....

நல்லதொரு கலைஞனை - படைப்பாளியை எழுத்து.காம் மட்டும் அன்றி வாசகர்கள் நாமும் இழக்கின்றோம். தரமான படைப்புக்களை கொண்டு தரத்துடன் இயங்கி வரும் எழுத்து தளமானது இப்படியான ஒரு கீழ்த்தரமான சாக்கடை வேலைகளிலும் ஈடுபடுகின்றது என்பது இப்போது தான் வெளி உலகிற்கு தெரிய வருகின்றது. தனக்கு நடந்தவற்றை துணிந்து இங்கு பதிவாக்கி ஒரு வீரமகனாகிறார் இந்த படைப்பாளி. இன்னும் எத்தனனையோ பேர் சொல்லமுடியாமல் விலகி இருகிறார்களோ தெரியவில்லை. எதுக்கு தான் இந்த பெரிய மனிதர்கள் என்கிற போர்வையோ... கேவலமாக இருக்கிறது. கவிதைகள், சிறுகதைகள் போன்றவற்றை படித்து இன்புற்றுற தளத்திற்கு வந்த என்னைப்போன்றவர்கள் பலருக்கு இது பெரிய ஏமாற்றமே. இந்த படைப்பாளியை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனாலும் இந்த கதையை படித்த போது மனதை கசக்கி புழிகிறது. எதுவுமே பண்ண தோன்றுதில்லை. நல்லதொரு படைப்பாளிக்கு இப்படியொரு அவமானமா.?? கொஞ்ச நாட்களின் முன்னர் தான் வேறு ஒரு பிரச்சனி ஓடிட்டு இருந்தது. எழுத்து தளமானது இப்போது எந்த பாதையில் செல்கின்றது என்பது தெரியவில்லை. பொறாமையினை வளர்க்கும் ஒரு தளமாகிறது. கூட்டணி அமைத்து கேவலமான - ஈனத்தனமான அரசியல் செய்கின்றது ஒரு கூட்டம்.

காதலித்து ஏமாற்றிய ஒரு பெண்ணுக்கு ஆதரவு கொடுக்கிறது ஒரு கீழ்த்தரமான கூட்டம். படைப்பாளி என்பவன் நடுநிலையாளனாக இருக்க வேண்டும். நடந்தவற்றை விசாரித்து இருக்கவேண்டும் அந்த பெரிய மனுசர்கள். தவிர்த்துவிட்டு ஒருத்தரை மட்டும் தவறு கூறும் போது அந்த பெண்ணின் தரம் மாறுகின்றது. அது அந்த பெண்ணுக்கே புரியவில்லை போலும். ஆனால், இவர்கள் படைப்பாளிகள். இவர்கள் தான நாளைய சமூகத்தை கட்டி காக்க போறீங்கள். வெட்ககேடு... வெளியே சொல்லாதீர்கள் நீங்கள் எல்லாம் படைப்பாளிகள் என்று....

ஏய் பெண்ணே...!!! நீ உன் நாடகத்தை ஆரம்பி... உன்னில் மயங்க இன்னொருத்தன் இல்லாமலா போக போறான் இந்த தளத்தில். ஆனாலும் உன்னையும் ஒரு பெண் என்று சொல்லும் பொழுது தான் தலை குனியவேண்டி இருக்குறது.

படைப்பாளி சந்தோஷ் அவர்களே...!!!
அந்த பெண்ணின் பெயரையும் கூறிவிடுவது நல்லதே. இனிவரும் காலத்தில் ஏமாற இருப்போருக்கு தப்பித்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

ஆனாலும், அந்த பெண் வேறு ஒரு பெயரில் வந்தால் யாருக்கு தெரிய போகிறது...

பதிவு : சந்திரா
நாள் : 3-Apr-15, 9:05 pm

மேலே