#பெண் கண்ணால் மருட்டி, இரு முலையால் மயக்கி, புண்ணாங்...
#பெண்
கண்ணால் மருட்டி, இரு முலையால் மயக்கி, புண்ணாங் குழியிடை தள்ளி என் அறிவை மயக்கினாள்
நான் உறக்கத்தில் இருக்கும்போது இன்னொருவனுடன் உறவு கொண்டுவிட்டு வந்து இரகசியமாய் உறங்கினாள் என்று பெண்ணின் மீது கடும் விமர்சனத்தை வைக்கிறார். இது சரியா.. பெண்களை நாம் இப்படி இழிவு படுத்தலாமா.. பட்டினத்தாரின் பார்வை மீது நமக்கு மெல்லிய வெறுப்பு ஏற்படுகிறது. எல்லாம் தனக்கு வேண்டுமென்று கூட்டல் அடையாளமாக பெண்கள் பேராசை கொள்ளும் போதுதான் அவர் இந்த விமர்சனத்தை வைக்கிறார் என்பதை அவர் பாடல்களை தொடர்ந்து படித்தால் நமது தவறைப் புரிந்து கொள்ளலாம்.