எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

1)நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா- மெளன ராகம்...

1)நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா-

மெளன ராகம் எப்படிய்யா கேக்கும் ?

2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?

3) வானத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்

முதல்ல ரோடைப்பாத்து நடங்க, எதிர்ல லாரி வருது

4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......

அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டா இது ? சுடு தண்ணிய மூஞ்சில ஊத்திடுவேன்.

5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........

கண்ணாடியை எடுத்து போடு முதல்லே..

6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........

டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவாப் போட்டது?

7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........

உன் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, அடி ரெண்டு போடலாமா...
சம்மதம்தானா ?

8)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

அங்கே உயிர் போயிடிச்சுனு அழுகுறாங்க உனக்கு பாட்டா?

9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......

அறிவே இல்லையா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?

10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........

சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க...

11)எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி

லிப்ட் இருக்கு இல்லை. கீழே இறங்கி வாங்க.

நாள் : 2-Aug-15, 4:12 pm

மேலே