எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இங்கு நண்பர்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்தவைகளை பதிவிட்டும் பகிர்ந்தும்...

இங்கு நண்பர்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்தவைகளை பதிவிட்டும் பகிர்ந்தும் பாராட்டியும் விமர்சித்தும் இப்படியாக கவிதைகளும் கவிதைகள் எனச் சொல்லப்படுபவைகளும் இயல்பாகவே கடந்தும்  கவனிக்கப் பெற்றும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. தனிவிடுகை அமைப்பு என்பது ஒருவர் கவிதைகள் படைப்புகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் அவரிடம் நல்ல நட்பு வளர்க்கப் பெறுவதற்காகவே. அது வேறு பல மாதிரியான நிகழ்வுகளுக்குப் பயன் படுத்தப்படுவது வேறு கதை. அதைப் பற்றியல்ல இந்த எண்ணம். இந்த மாதிரியாக நல்ல புரிதலில் செய்திகள் பரிமாறிக் கொள்வதற்காக தளத்தார் அமைப்பில் இருப்பது  தனி விடுகை. அதனை தங்கள் படைப்புகளுக்காக ஒரு விளம்பர யுக்திகளுக்காக ஒரு துண்டுச் சீட்டு விநியோகிப்பது போல கவிதைக்குக் கருத்துக் கேட்கவும் மதிப்பெண் போடச் சொல்லியும் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். மற்றவர்கள் நிலைப்பாடு எப்படி எனத் தெரியவில்லை. என் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் குறிப்பாக எனக்கு புதியதாக இணைபவர்கள் இந்த மாதிரியாக செய்யும் பொழுது என்னுடைய நட்பு வட்டத்தில் இருந்து நீக்கப் படுவீர்கள் என வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். இந்த மாதிரியான எடுப்பதும் கொடுப்பதும்   நிலைப்பாடுகளில்தான் (எனக்கு நீ.... உனக்கு நான் ) பல நல்ல படைப்புகள் காணாமலும் கவனிக்கப் பெறாமலும் போகின்றன.  இதை ஒரு பொது எண்ணமாகவே இங்கு பதிவு செய்கிறேன் . யாரையும் குறிப்பிட்டு அல்ல. தங்கள் படைப்பு நன்றாக இருப்பின் அது கண்டிப்பாக பலரால் கவனிக்கப் பெறும். அதனைப்  போல கவனம் பெற்று இந்தத் தளத்திலிருந்து நல்ல கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்.  அதெப்படி....? ஒரு படைப்பாளியாக உங்களுக்குப் பொறுப்பே இல்லையா..? ஊக்கப் படுத்த வேண்டாமா என்று இந்தப் பதிவில் பின்னூட்டம் பொங்க நினைப்பவர்களுக்கு ..... நான் என்னுடைய நேரப் போக்கிற்கு மட்டுமே எழுதுகிறேன் ... நான் ஒரு படைப்பாளியே அல்ல.... என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..!! தயவு செய்து தங்கள் படைப்புகளை வாசிக்கச் சொல்லி எனக்கு யாரும் மின்னஞ்சல் அனுப்பாதீர்கள். நன்றி...!!

பதிவு : கட்டாரி
நாள் : 17-Nov-15, 7:15 am

மேலே