-----இடுக்கண் களைவோம் ---- கரை புரண்டு ஓடும் தண்ணீர்...
-----இடுக்கண் களைவோம் ----
கரை புரண்டு ஓடும் தண்ணீர் வெள்ளத்தினும் சால மிகுத்து
பெருக்கெடுத்து ஓடுகிறது மக்களின் கண்ணீர் வெள்ளம் .
நிர்கதியாய் நிற்கும் இவர்களுக்கு நிஜக் கரம் நீட்டுவோம் .
உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களையும்
வள்ளுவரின் ஆதரிசம் எல்லாம் உண்மை வடிவம் பெற வேண்டிய
தருணம் இதுதான் .
வயிற்றிற்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்
என்று ஏழைகளுக்காகத்தான் பாடினான் பாரதி.
இத் தருணத்தில் அது எல்லோருக்குமே தேவை .
புற நானூற்று கவிஞன் பாடினான்
உண்டாலம்ம இவ்வுலகம்
தமக்கென வாழா நோன்றாள்
பிறர்க்கென வாழுநர் உன்மையானே...
---இவ்வரிகளில் இத்தருணத்தில் நாமும் சிறிது வாழ்ந்து பார்ப்போம் .
பாதிக்கப்பட்ட இடங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும்
அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
---அன்புடன், கவின் சாரலன்