எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து பொங்கல் போட்டி 2016--- எண்ணம் 03---- தலைப்பு...

எழுத்து பொங்கல் போட்டி 2016--- எண்ணம் 03---- தலைப்பு    வெளிநாட்டு தமிழர்களும் பொங்கல் கொண்டாட்டமும் 


 கிட்டத்தட்ட எழுபது மில்லியன் தமிழர்கள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நம் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை மறக்கவில்லை என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பாரத நாட்டிலுள்ள உறவினர்,நண்பர்களையோ,அல்லது கலாச்சாரம், பாரம்பரிய பண்டிகைகளையோ மறந்து விடவில்லை; அவர்களுக்கென்ன; வெளிநாட்டில் குடியேறி  நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதித்து சொத்து சேர்த்து நன்றாக இருக்கிறார்கள்; நம்மையும் நம் பண்டிகைகளையும் மறந்து விட்டார்கள் என்று நாம் எண்ணினால் அது சிறிதும் இரக்கம் அற்,ற செயல். அவர்கள் நம்மை சந்திக்க ஏங்குகிறார்கள். பொங்கல் எப்போது வருகிறது என்று காத்திருந்து மகிழ்ச்சியுடன் விமரிசையாகவே கொண்டாடுகிறார்கள். வாட்சப்,முகநூல் போன்றவற்றில் வரும்  வாழ்த்துக்கள்,வீடியோக்கள், எண்ணங்கள் போன்றவற்றை பாருங்கள் புரியும்.  இன்னொன்று இப்போதெல்லாம் வெளிநாட்டில் ஒரே ஊரிலோ பக்கத்து ஊர்களிலோ இருக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் கூடி பொங்கல் கொண்டாடி அளவளாவி மகிழ்ச்சியாய் இருந்து விட்டு பின் அவரவர் இடத்துக்கு போனால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்; ஏன்? சிறிய அளவில் செயல்படுத்தவும் ஆரம்பித்து  விட்டார்கள். இனி கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையலாம்.இது நம் ஊர்களில் நடைபெறும் காணும் பொங்கலை ஞாபகப் படுத்தவில்லையா? காணும் பொங்கலில் என்ன செய்கிறோம்?  உறவினர்களும் நண்பர்களும் கடற்கரை முன்போ, ஆற்றங்கரை முன்போ ஒன்று கூடி கொண்டாடுகிறோம்; வயதில் பெரியவர்களை வீடு தேடி சென்று மரியாதை செலுத்தி ஆசிகள் பெறுகிறோம்;  அதைத்தான் அவர்களும் செய்கிறார்கள்;
அவர்களை குறை கூறாமல் புரிந்து கொள்வோம்; பொங்கலன்று வாட்சப்ப் மூலமோ தொலைபேசி மூலமோ அழைத்து வாழ்த்துக்கள் கூறுவோம்; அன்பாக பேசுவோம். அம்மாக்கள் புதியதாய் திருமணமாகி  வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் தங்கள் பெண்களுக்கு பொங்கல் பண்டிகை வருமுன்னே,பொங்கல்   எப்படி தயாரிப்பது போன்ற விவரங்களை வாட்சப், கடிதம் என்று தன்னால் முடிந்த தகவல் தொடர்பு முறையில் கற்பிக்கலாம். அது அவர்களுக்கு அன்பான ஆதரவாக இருக்கும்.


பதிவு : M Kailas
நாள் : 17-Jan-16, 12:04 am

மேலே