எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஹயாக்ஸ்நிறுவனத்தின் 11வது ஆண்டு நிறைவுக் கட்டுரைப் போட்டிக்கான சிறப்புப்...

ஹயாக்ஸ்நிறுவனத்தின் 11வது ஆண்டு நிறைவுக் கட்டுரைப் போட்டிக்கான சிறப்புப் பரிசுக்குநன்றி. (தா. ஜோ. ஜூலியஸ் )


 தரிசாகக் கிடக்குமோ 
பரிசுபெறா கவிதைகள் 
அரிசினத்தால் அவற்றை 
எரிநெருப்பில் இடுவோமோ!!! 

 என்ற ஆதங்கத்தில் இருந்த எனக்கு கடந்த வெள்ளிக் கிழமை, ஒரு அழகிய கப்பில், எழுத்து.கொம் என சிறப்புப்பரிசு ஒன்று எனது வின் ஞானம் என்ற கவிதையின்முதல் மூன்று கண்ணிகளை பதித்து ஹயாக்ஸ்நிறுவனத்தினர் அனுப்பி உள்ளனர். எதிர்பாராத முத்தம் போல் எதிர்பாராமல் கிடைத்த இந்ததளத்தில் நான் பெறும் முதல் பரிசு இது..  இந்தஎழுத்து தளத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனதுகவிதையினை பரிசுக்குரிய கவிதையாக தேர்வு செய்த தேர்வுக் குழுவுக்கும் மிக்க நன்றி.முக நூலில் என் மகள் இந்த பரிசுக் கிண்ணத்தை பதிவு செய்துள்ளார்.அவருக்கும் நன்றி. 

பதிவு : T. Joseph Julius
நாள் : 25-Jan-16, 4:37 pm

மேலே