மகளிர் மட்டும்.. அதிகாலை விடியலிலே இன்முகம் காட்டி தேநீர்...
மகளிர் மட்டும்..
அதிகாலை விடியலிலே இன்முகம் காட்டிதேநீர் அளிப்பதிலே ஆரம்ப சேவைவகை வகையாய் உணவுடனே அன்பும் ஊட்டிஎதிர்பாராமல் வாழ்வதெல்லாம் மகளிர் மட்டும்.!
அஞ்சனத்தை பூசி தினம் மங்களம் சேர்த்துஅஞ்சுகின்ற நடையினிலே மெட்டியிசைத்துசிதறிவிழும் சில்லறையின் நகைப்பின் ஒலியில்இல்லம் அழகூட்டி பார்ப்பதெல்லாம் மகளிர் மட்டும்..!
கருவினிலே சுமந்திடுவாள் வாரிசதனைமகப் பேற்றில் கண்டிடுவாள் மரண வலியும்ஆடவரால் இயலாத அற்புதம் எல்லாம்அகிலத்தில் நடத்துகின்றார் மகளிர் மட்டும்..!
கணவனென்றும் பிள்ளையென்றும் உறவுகளென்றும்உள்ளத்தினை உள்வாங்கும் உயிர் எந்திரம்கள்ளத்தனம் புகும் நெஞ்சம் கண்டால் அவரைநல்லவராய் அமைப்பதெல்லாம் மகளிர் மட்டும்..!இல்லத்தின் சுமைதாங்கி என்றென்றுமாகிஎத்தனைதான் துயர் வரினும் அமைச்சருமாகிஆலோசனை வழங்கிடுவாள் இடரும் ஓடஇல்லம் ஒளிர வைப்பதெல்லாம் மகளிர் மட்டும்..!
தாயாகி தாரமாகி தங்கையுமாகி - பெண்தியாகியாகி தான் தேய்வாள் நித்தம் வாழ்வில்உணர்ந்திடுங்கள் உத்தமரே ஆடவர் நீங்கள்உங்களன்பு கூட்டலில் பெண் வாழ்வு மிளிரட்டும்..!!
=================================================27-02-2016 அன்று இலக்கிய சோலை மாத இதழ்நடத்திய கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.தலைப்பினை அளித்து வாசிக்க பணித்த பத்திரிக்கைஆசிரியர் திரு சோலைத் தமிழினியன் அவர்களுக்குஎன் நன்றிகள்.=================================================
மகளிர் தின வாழ்த்துக்களுடன்,சொ. சாந்தி