என் கற்ப்பனைக்கும் அப்பால்" விடியும் வரை ஒளி தர...
என் கற்ப்பனைக்கும் அப்பால்"
விடியும் வரை
ஒளி தர மறுத்திடும்
சூரியனே...!!
நீ
வந்தால் தான்
விடியலே என்கிறார்கள்..
இதுதான் உலக வழக்கமாம்..
அவர்களுக்கு என்ன
தெரியவாபோகிறது..
உன்னையும்
உழுது எழுப்புபவன்
உறக்கமின்றி
உழைத்திடும்
விவசாயி என்று...!!