எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வள்ளுவன் என்றொரு பிள்ளையைப் பெற்றவள் வாழ்வில் கலந்து வாழுகிறாள்....

வள்ளுவன் என்றொரு பிள்ளையைப் பெற்றவள்

வாழ்வில் கலந்து வாழுகிறாள்.
துள்ளி எழுந்தவள் நல்லிளங்கோ மகன்
சொல்லில் எழுந்தவள் ஆளுகிறாள்.
கள்ளையும் மீறிய போதையில் ஊறிய
கமபனில் வளர்ந்தவள் கூடுகிறாள்.
பள்ளியறையையே பார்க்காமல் கன்னியாய்
பிள்ளைகள் கோடி பெற்றெடுத்தாள்.
பாரதி பெற்றவள் தாசருக்கு உற்றவள்
பால் சுரந்து ஊட்டிட ஏங்கியவள்.
யாரெவர் கூறிய மார்பினைக் கீறிய 
ஆர்வ மொழிகளைத் தாங்கியவள். 
ஆறேழு மொழிகளின் தாயிவள் ஆயினும் 
அன்றுபோல் இன்று பால் சுரக்கிறாள்.
சீரிய மதுரையில் தேறிய புலவரால் 
சங்கம் வளர்ந்தவள் , வளர்க்கிறாள். ��t���

பதிவு : கனவுதாசன்
நாள் : 16-Apr-16, 2:28 pm

மேலே