எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழின் பெருமைகள் சில…! தமிழின் பண்டைய இலக்கியத்தில் தமிழின்...

                    தமிழின் பெருமைகள் சில…! 

 தமிழின் பண்டைய இலக்கியத்தில் தமிழின் பெருமை: 
  1.     “ என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”
“ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”. - கம்ப இராமாயணம், 
  2.     “ இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்” - தமிழ் விடுதூது
  3.     “பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினு மோர் எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பது போல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்”                                                            (மனோன்.)  - பேராசிரியர் சுந்தரம் பிள்ளை 
  4.     ஆரவாரம் பெருக்காதது ஆற்றல் வீணாகத் தேவையற்றது உள்ளது உள்ளவாறு உணர்த்தும் திறத்தது வீண்காலச் செலவுக்கு இடம் அளிக்காதது பயில்வதற்கு எளிதானது பொருள் அறிதற்கு எளிதாயது பாடுதற்கு இனிமை பயப்பது வழிபடுவோர் துதித்தற்கு இனிமை பயப்பது சாகாக் கல்வியை உணர்த்தும் திறமுடையது திருவருள் வலத்தால் வாய்த்ததெனப் போற்றப்படுவது தமிழ் -  இராமலிங்க அடிகளார் 
தமிழ் உரையாசியர் வரிகளில் தமிழின் பெருமை: 
  1.   “ஒருந் தமிழொரு மூன்றும் உலகின் புறவகுத்துச்       சேரன் தெரித்த சிலப்பதிகாரம்”   “பழுதற்ற முத்தமிழின் பாடற்குரையின் றெழுதத் துணிவதே யான்” - அடியார்க்கு நல்லார்- சிலப்பதிகார உரைப் பாயிரம். 
 தமிழ் இலக்கண நூலில் தமிழின் பெருமை: 
  1.     ‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ - பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல் 2.    2. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி  -புறப்பொருள் வெண்பாமாலை. 
 தற்கால இலக்கியத்தில் தமிழின் பெருமை: 
  1.     “ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”       
‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம்       பரவும்வகை செய்தல் வேண்டும்.       
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்       தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!’      
 “வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்,       வாழிய பாரத மணித்திரு நாடு” – பாரதி 
  2.   “தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்       தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்”       “இனிமைத் தமிழ் மொழி எமது-எமக்       கின்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!” – பாரதிதாசன். அறிஞர்களின் கூற்றுகளில் தமிழின் பெருமை: 
  1.   “தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல். 
  2.     தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.- டாக்டர் ஜி.யு.போப், 
3.      திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்      

நாள் : 18-Apr-16, 8:13 pm

மேலே