எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செம்மொழித் தமிழ்.....!!! ``````````````````````````````````````` உலக மொழிகள்: ```````````````````````````` உலகத்தில்...

  செம்மொழித் தமிழ்.....!!!

```````````````````````````````````````
உலக மொழிகள்:
````````````````````````````
உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சு மொழிகளே.“எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே” என்று வள்ளலார் அருள்கிறார்.
செம்மொழிகள்:
`````````````````````````
திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும்.கிரேக்கம், இலத்தின், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்.திருக்குறள் பற்றி டாக்டர் கிரௌல்:டாக்டர் கிரௌல், “ தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது” என்று மொழிந்து இன்புற்றார்.
தமிழின் தொன்மை:
```````````````````````````````````
உலகில் பழமையான நிலபகுதியான “குமரிக்கண்டத்தில்” தமிழ் தோன்றியதாக “தண்டியலங்கார” மேற்கோள் செய்யுள் கூறுகிறது.
“ஒங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி 
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் 
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது 
தன்னே ரிலாத தமிழ்”
தமிழின் மேன்மை:
````````````````````````````````
தமிழ் மெல்லோசை மொழி, அதனாலேயே உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகிறது.
தமிழ் மொழியின் தாய்மை:
```````````````````````````````````````````
பெற்றோரை குறிக்கும் “அம்மை, அப்பன்” என்னும் குமரிநாட்டுத்(நாஞ்சில் நாடு) தமிழ்ச்சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.
தமிழ் மொழியின் தூய்மை:
````````````````````````````````````````````
“தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்” என்று கூறினார் கால்டுவெல்.
தமிழ் மொழியின் செம்மை:
````````````````````````````````````````````
மொழிக்கு இலக்கான வரம்பும் சொற்களின் திருந்திய வடிவும் அவசியம். இவற்றை தமிழில் உள்ளது போல, வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், “செந்தமிழ்” எனப்பட்டது.
தமிழ் மொழியின் இயற்கை வளர்ச்சி:
````````````````````````````````````````````````````````````
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” - தொல்காப்பியம்தமிழில் இடுகுறி பெயர்கள் குறைவு.ஒருமை, பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் உண்டு.வடமொழியில் ஒருமை, இருமை, பன்மையென மூவகை எண் உள்ளன.தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு; பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை.தமிழ் மொழியின் இலக்கண நிறைவு:எல்லா மொழிகளும் “எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால் தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருள் இலக்கணத்தையும்” கூறுகிறது. அதனையும் “அகம், புறம்” என இருவகையாகப் பகுத்துள்ளது.
தமிழ் மொழியின் செய்யுள் சிறப்பு:
``````````````````````````````````````````````````````
“கலிப்பா” முதலான செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை.
தமிழ் மொழியின் அணிச் சிறப்பு:
`````````````````````````````````````````````````````
புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க “உவமை, உருவகம்” முதலிய நூற்றுக்கணக்கான அணிகளைப் பயன்படுத்தி பாடல்களை இயற்றியுள்ளார்கள்.  

பதிவு : Shyamala Rajasekar
நாள் : 18-Apr-16, 9:17 pm

மேலே