எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் மொழி பொருள் வன்மை மிக்கது. எல்லா வகை...

  தமிழ் மொழி பொருள் வன்மை மிக்கது. 

எல்லா வகை மனிதர்களையுமே ஆள்பவன் அதாவது அரசன் என்று உயர்த்திக் கூறும் சொல் ஒன்று தமிழில் உண்டு! அது என்ன சொல்?   
                                  அதுதான் ஆளி என்ற சொல்!  கீழே வரும் சொற்களை கவனிப்போம்!
      1.  விருந்தாளி = விருந்து + ஆளி; அதாவது விருந்தை ஆள்பவன். விருந்தோம்பல் செய்பவர் விருந்தாளி என அழைக்கப்படும் விருந்தினரை அரசனைப் போல் நினைத்து உபசரிக்க வேண்டும்.
      2. தொழிலாளி = தொழில் + ஆளி ; அதாவது தொழிலை ஆள்பவர். முதலாளி எவ்வளவுதான் வணிகத்தில்  பணம் போட்டாலும் வேலை செய்யும் தொழிலாளி நன்கு செய்யாவிடில் வணிகம் வளருமா? அவர் தொழிலாளியை மரியாதையுடன் கவனித்து அவருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர் தொழிலுக்கு  நியாயமான சம்பளத்தை கொடுக்க வேண்டும்;  ஏறும்  விலைவாசிக்கு தக்கபடியும் சம்பளம் ஏற்ற வேண்டும்.      3.முதலாளி = முதல் + ஆளி;   வியாபாரம் செய்பவர் முதல் போட்டதனால்தானே எல்லோருக்கும் வேலை கிடைத்தது? ஆகையால் ஊழியர்களும் தொழிலாளிகளும் முதலாளியின் வணிகம் நன்கு நடக்க அவர் மீது மரியாதையுடனும் நன்றியுடனும் நன்கு உழைக்க வேண்டும்.    4. கூட்டாளி =  கூட்டு+ஆளி;  ஒரு ஆள் தனியாக வணிகம் செய்ய முடியாவிடில் இன்னொருவரையும் முதல் கொடுக்க வைத்து அவர் உழைப்பையும் பயன்படுத்தி வணிகத்தை விரிவுபடுத்துகிறார். அந்த இன்னொருவர் கூட்டாளி ஆகிறார்; அதாவது சேர்ந்து ஆள்பவர் ஆகிறார்.அவரும் அரசர்தானே!    5.காவலாளி= காவல் +ஆளி; காவலின் முக்கியத்தை சொல்ல வேண்டியதில்லை. எனில் அவரும் அரசர்தானே!   இப்படி மனிதர் எல்லோரையும் அரசராக பாவிக்கிறது தமிழ் மொழி! யாரையும் அலட்சியம் செய்யக் கூடாது எனும் பண்பை போதிக்கும் மொழியாக தமிழ் மொழி இருக்கிறது.     

பதிவு : M Kailas
நாள் : 18-Apr-16, 10:39 pm

மேலே