எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா அம்மா அம்மா ....! எவ்வளவு அழகான வார்த்தை...!...

அம்மா அம்மா அம்மா ....! 

 எவ்வளவு அழகான வார்த்தை...! 
 உன்னை அம்மா என்று அழைக்க,
 தவமிருந்தேன் ஈரைந்து மாதங்கள்- 
 உன் கருவில், உயிர் தந்தையே தாயே..!
 தத்தி தத்தி நான் நடக்க, நீ நெகிழ்ந்தாய்; 
 மழலை மொழியை நான் வாசிக்க வாசிக்க, 
 உனக்கு ஏற்பட்ட பூரிப்பு கொஞ்சமில்லை என்றாய்;
 பள்ளிக்கு சென்று வந்தேன் , நீ பெருமிதம் கொன்றாய்; 
கல்லூரி சென்று வந்தேன், நீ சாதித்ததாய் உணர்ந்தாய்;
 உன் பேர் சொல்லும் பிள்ளை ஆனேன் இன்று, 
 உன் கனவுகள் நிறைவேறியது அம்மா...! 
 என்னை சுமந்தை, என் சுமைகளையும் சுமந்தாய்...!
 ஏழு ஜென்மங்கள் கடந்தும், நன் உன் மகளாக பிறக்க வரம் தருவாய் தாயே...!      

பதிவு : Shyamala G
நாள் : 30-Aug-16, 3:30 pm

மேலே