எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மலராய்ப் பிறந்தாய் மனதால் வளர்ந்தாய்... கலையில் நடந்து முத்திரைப்...

மலராய்ப் பிறந்தாய் மனதால் வளர்ந்தாய்...
கலையில் நடந்து முத்திரைப் பதித்தாய்...
அரசியலில் இணைந்து ஆளுமையில் நின்றாய்...
தமிழ் மக்களின் அம்மாவாக உயர்ந்தாய்......
ஏழையின் வாழ்க்கையில் நீதான் ஒளிவிளக்கு...
ஏற்றாமல் ஒளிர்ந்திடும் உன்றன் கிழக்கு...
தங்க மங்கை நீபெற்ற சிறப்பு...
உன்றன் இழப்பு பேரிடி எங்களுக்கு......
தமிழர்களின் அன்னை ஆழ்ந்த உறக்கத்தில்
தமிழகமே மூழ்கியது தாளாத துயரத்தில்
தமிழ் அன்னையும் மூழ்கினாள் சோகத்தில்
தமிழர்களை விட்டுச் சென்றாய் வருத்தத்தில்.......
ஒருசோடி கண்கள் பார்வை இழந்தது...
பலகோடி கண்கள் கண்ணீரில் நனைந்தது...
பெண்கள் நெஞ்சில் துணிவைக் கொடுத்து
தங்க தாரகையே தலைச் சாய்ந்தாயே......
தமிழ்த்தேசத்தின் இழப்பு தமிழினத்தின் இழப்பு...
பாரத தேசத்தின் மிகப்பெரும் இழப்பு...
உலகமே இன்று கண்ணீர் சிந்துகிறது...
உனதாளுமை அழியாத சரித்திரம் படைக்கிறது......

நாள் : 6-Dec-16, 4:44 pm

மேலே