காதுகளின் ஒரம் கலவை பேசி; கண்களின் ஒரம் கருஞ்சாந்து...
காதுகளின் ஒரம் கலவை பேசி;
கண்களின் ஒரம் கருஞ்சாந்து இட்டு;
உதடுகளின் ஒரம் முத்தமிட்டு;
கழுத்துகளின் ஒரம் கவ்வி எடுத்து;
கை தொட்டு, இடை தொட்டு;
விரல் நுனியில் நகங்கள் கடித்து;
கை கோர்த்து, நடை பயின்று;
பாதம் தொட்டு.
அடுத்து நாள் காலை, அவள் என்னை வரச் சொல்ல;
துங்காத இரவுகள் கடந்து; அடுத்த நாள்
நாள்காட்டி அடித்தவுடன் "அஞ்சு நிமிஷத்துல வந்துரேன் டி" என்று கொஞ்சி குலாவி, கதறவிட்டு, கெஞ்ச விட்டு " அரை மணி நேரம் ஆச்சு நா இங்க வந்து ", என்றவுடன்
மூன்று குட்டி தொப்பு கரணம் போட்டு, மண்டி இட்டு, மண்டையில் குட்டி "Its ok dear",என்ற வார்த்தைக்கு ஏங்க வைத்து செல்லமாய் திட்டிவிட்டு
பின் திரும்பி சிறு புன்னகையுடன் "எப்படியே வந்துடான்",
என்று மனதுக்குள் காதல் செய்து; என்னை திட்டி தீர்த்து;
தோளில் சாய்ந்து " என்ன சாப்பிடலாம்?"
என்று அரம்பிக்கிறது காதலின் இனிமை நேரங்கள்.....